Skip to main content

டாஸ்மாக் கடை திறப்பு; பொதுமக்கள் எதிர்ப்பு!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Tasmac store opening Public  road block


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே, மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ளது புல்லூர் கிராமம். இந்த கிராமம் கடலூர் - கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியின் அருகில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஏற்கனவே, இப்பகுதியில் அதிகளவில் விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் கடையின் மூலம் விபத்துகள் இன்னும் அதிகரித்து வருகின்றன என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை நடத்துவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 


அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது விபத்துகளை இன்னும் அதிகரிக்கும். எனவே, கடையை மூட வேண்டுமென்று டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. பாப்புலர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய கட்சிகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், 300க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர். டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாஸ்மாக் கடை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். 


அப்போது டாஸ்மாக் கடைக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கடையின் நுழைவுவாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மங்கலம்பேட்டை - திருச்சி ரோடு இணைப்புச் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், டி.எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.