Skip to main content

"இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது": கமல்ஹாசன் ட்வீட்!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

tasmac shops supreme court order actor kamal hassan tweet


தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் ஓரிரு நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் எனத் தெரிக்கிறது. 


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், "மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை மதுக்கடை திறப்பில் காட்டுகிறது தமிழக அரசு. ஐகோர்ட்டில் பதிலளிக்க அவகாசம் கேட்டுவிட்டு உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிவிட்டது. தமிழக அரசுக்கு தீர்ப்பு வழங்க இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்