Published on 12/11/2019 | Edited on 12/11/2019
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இந்த ஆறு மருத்துவக் கல்லூரிகளுக்கும் முதற்கட்டமாக தலா ரூபாய் 100 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு. மேலும் ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல் என ஆறு மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.
![tamilnadu new medical colleges tn govt order passed and fund released](http://image.nakkheeran.in/cdn/farfuture/5ELGUMdXt8_hHwYZwVxWvMZ2qFTkU-jF-8ZiCld5Cjg/1573567820/sites/default/files/inline-images/tn%20govt.jpg)
மத்திய அரசு சார்பில் தலா ரூபாய் 195 கோடியும், மாநில அரசு சார்பில் தலா ரூபாய் 130 கோடியும் ஒதுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.