Skip to main content

மருத்துவ கலந்தாய்வு -இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Published on 03/11/2020 | Edited on 03/11/2020

 

tamilnadu medical counselling students apply online

 

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு மாணவர்கள் இன்று (03/11/2020) முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

 

மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்) கலந்தாய்வில் பங்கேற்க இன்று (03/11/2020) முதல் விண்ணப்பிக்கலாம். வரும் 12- ஆம் தேதி மாலை 05.00 மணி வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 16- ஆம் தேதி வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும். tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மருத்துவ கலந்தாய்விற்கான தேதிகள் அறிவிக்கப்படும்'. இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டில் மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழகத்தில் நவம்பர் 18- ஆம் தேதி முதல் கலந்தாய்வு?

 

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நவம்பர் 18-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஜூன் மாதத்தில் நடக்க வேண்டிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கரோனா. 7.5% உள் இடஒதுக்கீடு விவகாரத்தால் தாமதமாக நடக்கிறது. மருத்துவ கலந்தாய்வில் 7.5% உள் இடஒதுக்கீடு மூலம் 303 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,650, தனியார் கல்லூரிகளில் 1,052 இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 897 இடங்கள் இருக்கும் நிலையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.