Skip to main content

“எங்க முதல்வர் கொடுக்கச் சொன்னார்” - துபாயில் அன்பளிப்பு வழங்கிய அமைச்சர்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Tamil Nadu Government gifted 1000 books to Dubai library

 

தமிழகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த 2021 ஆம் கல்வியாண்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக வினாடி வினாப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தேர்வாகும் மாணவர்களை ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் அழைத்துச் செல்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற வினாடி வினாப் போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 67 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

இதனையடுத்து, இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வியாழக்கிழமையன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபாய்க்கு சென்றடைந்தனர்.

 

துபாய் சென்ற மாணவர்கள் அங்குள்ள முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துபாயின் லூவர் மியூசியம், கஸ்ர்-அல்-வதன் அரண்மனை, ஜெபல் அலி இந்து கோவில் ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து துபாய் சென்ற மாணவிகள் பேசும்போது, “எங்களுக்கு இது கனவு மாதிரி இருக்கு. துபாய்க்கும் இந்தியாவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. துபாய் ஏர்போர்ட்ல எங்களுக்கு பூ கொடுத்து வரவேற்றாங்க. இந்தப் பயணத்த மறக்கமாட்டோம்” என உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

 

அதேபோல், துபாயில் இருக்கும் முக்கிய நூலகங்களில் ஒன்றான முகமது பின் ரஷித் நூலகத்துக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.  அப்போது, அந்தப் பிரம்மாண்ட நூலகத்திற்கு தமிழக அரசு சார்பில் 1000 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. துபாய் வாழ் தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு முதல்வர் வழங்கியிருந்த 1000 புத்தகங்களை நூலகத்தின் இயக்குனர் முஹம்மத் பின் சாலிம்மிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இது தொடர்பான வீடியோக்காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.