Skip to main content

 இலங்கை கடற்படை அட்டூழியம்; தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Tamil Nadu fishermen chased away by Sri Lankan Navy
கோப்புப்படம்

 

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீனவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். 

 

இதனிடையே 5 படகுகளைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், மீன் பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களைச் சேதப்படுத்தி, இனி இந்த பகுதிக்கு மீன் பிடிக்க வரக்கூடாது என்று கூறி விரட்டியடித்துள்ளனர். இதன் காரணமாக மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
Chief Minister M.K.Stal's letter to the Union Minister

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும், 8 பேர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும்  மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் நேற்று (06.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு. அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடித் தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதோடு, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

21 தமிழக மீனவர்கள் கைது; தொடரும் அட்டூழியம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

21 Tamil Nadu fishermen arrested; Continued atrocities

 

மிக்ஜாம் புயல் காரணமாக பல நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், நேற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் 21 பேர் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.

 

நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை மன்னார் - கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 17 பேரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இன்று தற்போது ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மொத்தம் 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த 21 மீனவர்களில் 13 பேர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள், 8 பேர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.