Skip to main content

மைசூரில் சிறைப்பட்டிருந்த தமிழ் கல்வெட்டு ஆவணங்கள் தமிழகம் வருகின்றன! 

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Tamil inscription documents captured in Mysore are coming to Tamil Nadu!

 

மைசூரில் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தமிழ்க் கல்வெட்டு மைப்படி ஆவணங்களையும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் தேவைப்படும் ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. 

 

ஐம்பதாண்டுகள் ஊட்டி, அடுத்த ஐம்பது ஆண்டுகள் மைசூர் என நூறு ஆண்டுகள் சிறைப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மற்றும் தமிழ் தொல்லியல் ஆவணங்கள் தமிழக வரலாற்றினையே மாற்றி எழுத்தக்கூடிய பெரும் ஆவணங்களாகும். அவற்றை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசிகவின் கெளதம சன்னா  வழக்குத் தொடுத்திருந்தார். 

 

இந்த வழக்கை  விசாரித்த நீதியரசர் கிருபாகரன், மைசூரில் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தமிழ்க் கல்வெட்டு மைப்படி ஆவணங்களையும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் தேவைப்படும் ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்திருந்தார். 

 

அதன்படி, நேற்று மைசூரில் உள்ள ஒன்றிய தொல்லியல் ஆய்வுத் துறையானது தமிழ்த் கல்வெட்டு ஆவணங்களை தமிழகத்திற்குக் குறிப்பாகச் சென்னைக்கு கொண்டு வருவதாகக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தையும் சென்னையிலுள்ள இந்தியக் கல்வெட்டு ஆய்வு மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதற்காக நீதிமன்ற ஆணைக்கிணைங்க தமிழகத்தில் அந்த துறைகளின் பெயரையும் மாற்றி உடனடியாக அது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்து இருக்கிறது. 

 

இதுதொடர்பாக பேசிய கெளதம சன்னா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‘இதுநாள் வரை ஒன்றியத் தொல்லியத்துறை காப்பிலுள்ள ஆவணங்களை அவ்வமைப்பு முறையாகப் பராமரிக்காததினால் ஏராளமான ஆவணங்கள் அழிந்துள்ளதாகத் தெரிய வருகிறது. நீதிமன்றத்தில் ஒன்றிய தொல்லியல் ஆய்வுத் துறை அளித்த அறிக்கையில் தமிழ் கல்வெட்டு ஆவணங்களின் எண்ணிக்கை முரண்பாடாகக் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என்பதே இதற்கு போதுமான சான்றாகும். அதுமட்டுமில்லாமல பல ஆவணங்கள் காணவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழக வரலாற்றினை அறிந்து கொள்ளக் கிடைக்கும் இந்த அரிய கல்வெட்டு ஆவணங்களை தமிழக அரசின் தொல்லியல்துறையின் கீழ் வைத்து பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது என்பதைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். தமிழகத்திற்கு ஆவணங்கள் வந்து சேர்ந்த உடன் அவை உடனடியாக மின்னாக்கம் செய்யப்பட்டு, அவை மின்படிகளாக அதற்கான தனி இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டு, அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

 

மின்னாக்கம் செய்யப்பட்ட கல்வெட்டுப்படிகள் உடனடியாக அச்சிடப்பட்டு நூல் வடிவில் வெளியிடப்பட வேண்டும். அந்தத் தொல் ஆவணங்களை ஆய்வு செய்யத் தேவையான ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். ஆய்வு செய்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழக வரலாறு திருத்தி எழுதப்பட வரலாற்று ஆய்வாளர்கள் கொண்ட குழுவினை அமைக்க வேண்டும். அழிக்கப்பட்ட அல்லது தொலைந்து போன அல்லது எண்ணிக்கை முரண்பாடு குறித்து ஒன்றிய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கொடுத்த அறிக்கையின் மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.