Skip to main content

மைசூரில் சிறைப்பட்டிருந்த தமிழ் கல்வெட்டு ஆவணங்கள் தமிழகம் வருகின்றன! 

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Tamil inscription documents captured in Mysore are coming to Tamil Nadu!

 

மைசூரில் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தமிழ்க் கல்வெட்டு மைப்படி ஆவணங்களையும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் தேவைப்படும் ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. 

 

ஐம்பதாண்டுகள் ஊட்டி, அடுத்த ஐம்பது ஆண்டுகள் மைசூர் என நூறு ஆண்டுகள் சிறைப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மற்றும் தமிழ் தொல்லியல் ஆவணங்கள் தமிழக வரலாற்றினையே மாற்றி எழுத்தக்கூடிய பெரும் ஆவணங்களாகும். அவற்றை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசிகவின் கெளதம சன்னா  வழக்குத் தொடுத்திருந்தார். 

 

இந்த வழக்கை  விசாரித்த நீதியரசர் கிருபாகரன், மைசூரில் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தமிழ்க் கல்வெட்டு மைப்படி ஆவணங்களையும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் தேவைப்படும் ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்திருந்தார். 

 

அதன்படி, நேற்று மைசூரில் உள்ள ஒன்றிய தொல்லியல் ஆய்வுத் துறையானது தமிழ்த் கல்வெட்டு ஆவணங்களை தமிழகத்திற்குக் குறிப்பாகச் சென்னைக்கு கொண்டு வருவதாகக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தையும் சென்னையிலுள்ள இந்தியக் கல்வெட்டு ஆய்வு மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதற்காக நீதிமன்ற ஆணைக்கிணைங்க தமிழகத்தில் அந்த துறைகளின் பெயரையும் மாற்றி உடனடியாக அது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்து இருக்கிறது. 

 

இதுதொடர்பாக பேசிய கெளதம சன்னா தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‘இதுநாள் வரை ஒன்றியத் தொல்லியத்துறை காப்பிலுள்ள ஆவணங்களை அவ்வமைப்பு முறையாகப் பராமரிக்காததினால் ஏராளமான ஆவணங்கள் அழிந்துள்ளதாகத் தெரிய வருகிறது. நீதிமன்றத்தில் ஒன்றிய தொல்லியல் ஆய்வுத் துறை அளித்த அறிக்கையில் தமிழ் கல்வெட்டு ஆவணங்களின் எண்ணிக்கை முரண்பாடாகக் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என்பதே இதற்கு போதுமான சான்றாகும். அதுமட்டுமில்லாமல பல ஆவணங்கள் காணவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழக வரலாற்றினை அறிந்து கொள்ளக் கிடைக்கும் இந்த அரிய கல்வெட்டு ஆவணங்களை தமிழக அரசின் தொல்லியல்துறையின் கீழ் வைத்து பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது என்பதைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். தமிழகத்திற்கு ஆவணங்கள் வந்து சேர்ந்த உடன் அவை உடனடியாக மின்னாக்கம் செய்யப்பட்டு, அவை மின்படிகளாக அதற்கான தனி இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டு, அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

 

மின்னாக்கம் செய்யப்பட்ட கல்வெட்டுப்படிகள் உடனடியாக அச்சிடப்பட்டு நூல் வடிவில் வெளியிடப்பட வேண்டும். அந்தத் தொல் ஆவணங்களை ஆய்வு செய்யத் தேவையான ஆய்வாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். ஆய்வு செய்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழக வரலாறு திருத்தி எழுதப்பட வரலாற்று ஆய்வாளர்கள் கொண்ட குழுவினை அமைக்க வேண்டும். அழிக்கப்பட்ட அல்லது தொலைந்து போன அல்லது எண்ணிக்கை முரண்பாடு குறித்து ஒன்றிய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கொடுத்த அறிக்கையின் மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.