Skip to main content

“மதுரை கோவை பத்தி பேசுறீங்க; வேலூர யாராவது கவனிச்சீங்களா?” - துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

 "Talk about Madurai Coimbatore; Did anyone pay attention to Velura?''-Duraimurugan laughs at the speech

 

பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ''நிதிநிலை அறிக்கையில் குறிப்பாக கோவை பகுதிக்கு ஒரு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்று நான் என்னுடைய முதல் உரையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல் மத்திய சிறைச்சாலை பகுதி அமைந்திருக்கின்ற இடத்திலே செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான ஒரு திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதற்கு இந்த வருடம் 43 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த பணிகளும் விரைவாக துவங்கப்பட வேண்டும். வேகமாக வளர்ந்து வரக்கூடிய நகரங்களில் கோவை முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் வளர்ந்து வரக்கூடிய நகரத்திற்கு கனெக்டிவிட்டி என்று சொல்கின்ற இணைப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது விமான நிலையம். கோவையில் இருக்கக்கூடிய சாலைகளை பற்றி பல்வேறு முறை பேரவையில் பதிவு செய்திருக்கிறேன்'' என்றார்.

 

அதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''கோவை மெட்ரோவை பொறுத்த வரை பலமுறை திட்டமிட்டு பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதனால் லோடு பிரச்சனையால் வழித்தடங்களை மாற்றியமைத்து அதற்குப் பிறகு பீசிபிலிட்டு டெஸ்ட் பண்ணப்பட்டு அதற்கு அனுமதி கொடுத்து தற்பொழுது டிபிஆர்-க்கு அனுப்பி இருக்கிறோம். இன்னும் இரண்டு மாதத்தில் வந்துவிடும். விமான நிலையத்தை பொறுத்தவரை போன ஆண்டு நிதி எல்லாம் ஒதுக்கி கிட்டத்தட்ட 85 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து விட்டது. இன்னும் பாக்கி இருக்க வேலைகளை வேகமாக செய்ய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்டர்நேஷனல் டிக்லரேஷன் எங்கள் கையில் இல்லை. அது ஒன்றிய அரசிடம் இருக்கிறது. அதனால் நாங்கள் எங்களுடைய பணியை விரைவாக செய்கிறோம். அவர் உறுப்பினராக இருக்கக்கூடிய கட்சி தான் அங்கு டெல்லியில் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவங்க அமைச்சரிடம் கேட்க வேண்டும். எப்படி மதுரைக்கு நாங்கள் கேட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் மதுரைக்கு கேட்டு இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டாக மாற்றினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

 

அப்போது எழுந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''இவர்கள் மதுரை-கோவை இரண்டு ஏர்போர்ட் பற்றியும் பேசிக் கொள்கிறார்கள். வேலூர் ஒன்று இருக்கிறது. அதை யாராவது கவனிச்சீங்களா? இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு முடிஞ்சா நாங்களும் ஃபிளைட்ல போய் இறங்குவோம்'' என சொல்ல அவையிலிருந்த அனைவரும் சிரித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.