Skip to main content

இளைஞரின் இறப்பில் சந்தேகம்; சடலத்தை தோண்டி எடுக்கும் காவல்துறை! 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Suspicion of youth's death; Police dig up the body!

 

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் காவல் சரகம், கீழப்பிடாகை ஊராட்சிக்கு உட்பட்ட, சிந்தாமணி நடுத்தெருவைச் சேர்ந்த கலைவாணன்-விஜயராணி தம்பதியினர் மகன் சூர்யா(20). தந்தையை இழந்த சூர்யா, தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். சூர்யா, கடந்த 21ம் தேதி இரவு கீழையூர் காவல் சரகம், காமேஸ்வரம் ஊராட்சியில் உள்ள அவரது தாத்தா பன்னீர்செல்வம் என்பவரது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் ஜூன்.22ம்‌ தேதி காலை காமேஸ்வரத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் கத்தரி சாகுபடி வயலில் சூர்யா இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. சூர்யாவின் பிரேதத்தை அவரது தாத்தா பன்னீர்செல்வம் மற்றும் உறவினர்கள் சிந்தாமணிக்கு கொண்டு வந்து, சிந்தாமணியில் உள்ள சுடுகாட்டில் புதைத்து அடக்கம் செய்துள்ளனர்.

 

Suspicion of youth's death; Police dig up the body!

 

இந்நிலையில்  சூர்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மேற்கண்ட சூர்யாவின் சித்தப்பா கார்த்திகேயன் (46) கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கீழையூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இறப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து  சூர்யாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ்குமார், கீழையூர் காவல் ஆய்வாளர் பசுபதி, கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் மற்றும்  போலீசார் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு அவரது உடலை  தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்‌‌. தோண்டி எடுக்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.


நாகை அருகே இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புதைக்கப்பட்ட சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.