Skip to main content

மகனின் மரணத்தில் சந்தேகமடைந்த தந்தை... நண்பர்களை தீவிர விசாரணை செய்துவரும் காவல்துறையினர்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

Suspected father in son's death ... Police are conducting a serious investigation into friends

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைப் பிள்ளை. இவரது மகன் ஆனந்தராஜ், வயது 24. இவர், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பிரகாஷ், அபி, மகேந்திரன், ஆகாஷ் ஆகியோருடன் மலைக்கோட்டாலம் அருகே ஓடும் கோமுகி ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ், ஆற்றில் மூழ்கிய நிலையில் இறந்துகிடந்துள்ளார். இந்தத் தகவல் அவரது தந்தைக்குத் தெரியவந்தது. உடனடியாக உறவினர்களை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்தராஜ் உடலை ஆற்றுத் தண்ணீரிலிருந்து மீட்டனர். இதுகுறித்து உடனடியாக வரஞ்சரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராஜலட்சுமி, வரஞ்சரம் சப் - இன்ஸ்பெக்டர் பாரதி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்றனர்.

 

பின்னர் ஆனந்தராஜ் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மகனுடன் சென்ற அவரது நண்பர்கள் பிரகாஷ், அபி ஆகியோர் குடிபோதையில் இருந்துள்ளனர். அதனால் இவர்கள் குடிபோதையில் இருக்கும்போது அவர்களுக்குள் ஏதாவது தகராறு ஏற்பட்டு அதில் என் மகன் மீது தாக்குதல் நடத்தியதால் அவர் இறந்திருக்கலாம். எனவே இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், வழக்குப் பதிவுசெய்து சந்தேகத்தின் பெயரில் ஆனந்தராஜ் நண்பர்களான பிரகாஷ், அபி, ஆகாஷ், மகேந்திரன் ஆகிய 4 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

 

நண்பர்களுடன் சென்று மது பார்ட்டியில் கலந்துகொண்டதில் அவர்களுக்குள் போதை அதிகமாகி ஏற்பட்ட தகராறில் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது மதுபோதையில் குளிக்கச் செல்லும்போது ஆற்றுத் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம்... இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இறப்புக்கான காரணம் பிரேதப் பரிசோதனையில் தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நண்பர்களுடன் சென்ற இளைஞர், உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.