Skip to main content

“உச்சநீதிமன்றத்தை அணுகுவது தான் எங்களது கடைசி முடிவு” - அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

"Supreme Court is our final decision" - Minister Duraimurugan interview

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இரண்டு தரப்பினர் கருத்துக்களையும் கேட்ட ஒழுங்காற்றுக் குழு தலைவர், வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்குப் பரிந்துரைத்தார். மேலும், விரைவில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''காவிரி பிரச்சனையை பொறுத்தவரை நேற்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி நீரை தமிழகத்திற்கு விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு கடைசி முடிவு உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தான். 21 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் கர்நாடக முடிவு தெளிவாகத் தெரிந்து விடும். பிறகு வழக்கில் அதை இணைத்துக் கொண்டு எங்களுடைய வழக்கறிஞர்கள் பேசுவார்கள்'' என்றார்.

 

‘கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய நீர்வரத்து இல்லை என்று சொல்கிறார்கள்; தமிழக அதிகாரிகளும் மத்திய அரசு அதிகாரிகளும் அங்கு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பீர்களா?’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தாராளமாக அந்த கோரிக்கை வைப்போம். இன்னும் சொல்லப் போனால் உச்சநீதிமன்றமே இதனைப் பார்க்கலாம். அவர்களே ஒரு குழுவை அமைத்து கண்காணிக்கலாம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2026 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பேன்” - சரத்குமார்

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Sarathkumar has said that he will take office as the CM of Tamil Nadu in 2026

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வெற்றி பெற்றும் தமிழகத்தின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்பேன் எனறு சரத்குமார் தெரிவித்துள்ளார். 

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நேற்று நெல்லையில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய அவர், “56 ஆண்டுகள் இரு திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்துவிட்டனர். அண்மையில் வந்த சில தலைவர்கள் இவர்களை குறை செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனால் குறை செல்லவேண்டாம் என்றாலும் அது நிறைவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்று வெள்ள நீர் வடியாதது குறித்து மறியல் போராட்டங்கள் முற்றுகை எல்லாம் செய்துகொண்டிருக்கும் மக்கள், தேர்தல் வந்தவுடன் அவர்களுக்குத்தான் மீண்டும் வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்கிறார்கள்; அதற்கு காரணம் எல்லாம் பணம். ஜனநாயகம் போய் எல்லாம் பணநாயகமாகிவிட்டது. அதனை எல்லாம் மாற்றவேண்டும். உங்களால் முடியுமா என்று என்னை பார்த்து கேட்டால் நிச்சயம் எங்களால் முடியும் என்று நான் கூறுவேன்.

நான் ஒரு அமைதியான ஆறு; ஓடுவதும் தெரியாது, ஆழமும் புரியாது. ஆனால் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாங்கள் நிற்கும் போது எங்களின் வேகமும், ஆழமும் புரியும். தமிழகத்தில் 1954 முதல் 1963 வரை பொற்கால ஆட்சியை கொடுத்தவர் காமராஜர். அப்பழுக்கற்றவர் காமராஜர். 1967 ஆம் ஆண்டு காமராஜர் தோற்றுவிட்டார் என்று சரித்திரம் சொல்கிறது; ஆனால் அவர் தோற்கவில்லை தமிழகம் தான் தோற்றது.  தமிழக அரசியல்தான் தோற்றது என்று எழுத வேண்டுமே தவிர, ஒருபோதும் காமராஜர் தோற்கவில்லை. 

அதன்பிறகு தமிழகத்தை மாறி மாறி திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றனர். மாறி மாறி இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்களை கெடுத்து வைத்திருக்கின்றனர். தற்போது குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களது கணவன் வேலையில்லாமல் டாஸ்மாக்கிற்கு மட்டும் போயிட்டு வந்து நிம்மதியாக படுத்து தூங்குகிறார்கள். இதேபோன்று அரிசி, லாப்டாப், சைக்கில் போன்று அனைத்தையும் இலவசமாக கொடுத்துவிடுகிறீர்கள். அப்புறம் எப்படி அவர்கள் வேலைக்கு செல்வார்கள்? டாஸ்மாக்கிற்குத்தான் போவார்கள். இதையெல்லாம் சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றுவோம்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தங்களது இலக்கு அல்ல; 2026 ஆம் அண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக பதவியேற்பேன். திராவிட இயக்கங்கள் தொடர்ந்தால் இன்னும் 10, 20 ஆண்டுகளின் நாம் வாக்களித்து அவர்கள் வெற்றிபெறவேண்டிய நிலை மாறி வட இந்தியர்கள் மட்டும் வாக்களித்து திராவிட இயக்கங்கள் வெற்றி பெறும் நிலைமை உருவாகிவிடும். எல்லாரும் எல்லா மாநிலத்திற்கும் செல்லலாம்; ஆனால் அந்ததந்த மாநிலத்தின் மக்களுக்குத்தான் முதலில் வேலை கிடைக்க வேண்டும்” என்றார். 

Next Story

‘நா... படிக்கணும் என்ன விட்றுங்க...’- தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் எடுத்த முடிவு 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
  bride refused to marry while tying the thali

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மணப்பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

கர்நாடக மாநிலம் சிக்கப்யலாடகெரே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் திப்பரெட்டிகலியே பகுதியைச் சேர்ந்த யமுனாவிற்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி இருவருக்கும் சிக்கப்யலாடகெரேவில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், மணமேடையில் மணமகன் தாலி கட்ட முயன்றபோது, திடீரென எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று மணமகள் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் பெண்ணை சமாதானம் செய்து திருமணத்தை நடத்த முயன்றபோது, பெண் பிடிவாதமாக எனக்கு திருமணம் வேண்டாம் நான் படிக்கணும் என்று கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மணப்பெண் திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்பு அவருக்கு திருமணம் நடக்கவிருந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசுக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க கல்லூரியில் சீட் கிடைத்ததால், தனது பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும் என்று கூறி திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மணப்பெண்ணின் பேச்சை கேட்காமல் திருமணத்தை நடத்தவிருந்ததாகவும், அதனால்தான் தாலி கட்ட மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.