Skip to main content

“இது தமிழக சுகாதாரத்துறைக்கு கிடைத்த வெற்றியாகும்... இதற்காக ஐ.சி.எம்.ஆர் பாராட்டியுள்ளது”-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021
"This is a success for the Tamil Nadu Health Department ... ICMR has praised for this" - Interview with Minister Ma Subramanian

 

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக குழந்தைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டை சுகாதாரதுறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தும் குழந்தைகளுக்கான புதிதாக  வாங்கப்பட்ட இன்குபேட்டர்களை பார்வையிட்டும், திருநங்கைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார். அதன்பின் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்  போது, “கரோனா மூன்றாவது அலை வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். இதில் 30 வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகளும் 70 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயாராக உள்ளது. தமிழகத்தில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த 40 மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்பொழுது 6 லட்சம் டோஸ் வரை வீணடிக்கபட்டது.

 

"This is a success for the Tamil Nadu Health Department ... ICMR has praised for this" - Interview with Minister Ma Subramanian

 

தற்பொழுது தமிழகத்திற்கு ஒரு கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 550 டோஸ்கள் வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 159 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருந்து குப்பியில் 16 முதல் 24 சதவீதம் வரை கூடுதலாக மருந்து இருக்கும். இதனை வீணாகாமல் முறையாக பயன்படுத்தி ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தமிழக சுகாதாரதுறைக்கு  கிடைத்த வெற்றியாகும். மத்திய ஐ.சி.எம்.ஆர் தமிழக சுகாதாரத் துறையை பாராட்டியுள்ளது. இந்த மாதத்திற்கான மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 71 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டும். ஆனால் இதுவரை 10 லட்சம் வரை மருந்துகள் வந்துள்ளது.

 

நாளை அல்லது நாளை மறுநாள் 11 லட்சம் மருந்துகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத்துறையில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் என 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அல்லது பணி காலத்தை நீட்டிக்க வேண்டும் என போகிற இடமெல்லாம் மனுக்கள் வருகின்றது. இதுதொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசி துறைவாரியாக நல்லது செய்யப்படும். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது மருத்துவர்கள்  பணியில் இல்லாமல் தனது சொந்த கிளினிக்கில் பணி செய்து வருவதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நத்தம் பகுதியில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இதில் கூட்டுறவுத் தறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்ட கலெக்டர் விசாகன் உள்பட அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதையெல்லாம் வைத்து பணம் சம்பாரிக்கணுமா?' - மறுத்த அமைச்சர் மா.சு  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

'It doesn't seem like a good idea to monetize it' - Minister Ma.su interview

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேரளா அரசு சடலங்களை விற்று வருவாய் ஈட்டியது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 'அடையாளம் தெரியாத சடலங்கள் குறிப்பிட்ட காலம் வரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு ஆய்வுக்கு பயன்படுத்துவது என்பது எல்லா இடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று. அதிலும் கூட பணம் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு கேள்விக்குறி. தமிழ்நாடு அரசு கொஞ்சம் யோசித்து தான் முடிவு எடுக்கும். அது தேவையா என்பது தான். அது நல்லது என்று சொல்ல முடியாது. அதை போய் உடற்கூறாய்வுக்கு விற்பது என்பதை ஏற்கவில்லை. இலவசமாக தரலாம் ஆனால் அதை பணமாக்க வேண்டும் என்பது நல்ல கருத்தாக தெரியவில்லை'' என்றார்.

Next Story

அரசு மருத்துவரால் உயிருக்குப் போராடும் இளம் பெண்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Erode district thalavadi government doctor made wrong operation to woman

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வசிக்கும் ஓட்டுநர் பிரதீப்குமாரின் மனைவி அனுபல்லவி. வயது 25. இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு செய்யப்போய் தனக்கு நேர்ந்த அவலத்தை அனுபல்லவியே நம்மிடம் கூறுகிறார்.

“என்னுடைய வீட்டுக்காரர் டிரைவர். குடும்ப வறுமை காரணமா பெண் குழந்தைகளே போதுமென்று முடிவுசெய்து குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவுசெய்தோம். தாளவாடி அரசு மருத்துவமனையில் 2022, பிப்ரவரி 22-ஆம் தேதி அட்மிட்டானேன். 28 ஆம் தேதி 8 பேருக்கு ஆபரேஷன் செய்தாங்க. என்னைத் தவிர 7 பெண்களும் டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போய்ட்டாங்க.

எனக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அபாய கட்டத்துக்குச் சென்றேன். அவசர அவசரமா என்னை ஆம்புலன்ஸ்ல ஏத்தி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. அங்க 25 நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்தேன். பிறகுதான் சுயநினைவே வந்தது.

தாளவாடி அரசு மருத்துவமனையில் எனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த டாக்டர் என்ன செய்தாரோ தெரியலை. இதயத்துக்குச் செல்லும் அயோட்டா என்ற ரத்தப்போக்கு லேயரை (நரம்பை) துண்டித்து விட்டதாகவும் அதனைச் சரி செய்ய முடியாது. உயிருக்கு ஆபத்தானது என்றும் கோயம்புத்தூர் டாக்டர்கள் கூறினார்கள்.

இப்ப என்னால எந்த வேலையும் செய்யமுடியாது. இரண்டு குழந்தைகள் இருக்குது. என்னுடைய தாயார் வீட்டில்தான் இருக்கிறேன். அடிக்கடி வாந்தி, மயக்கம் இப்படி ஏதேதோ பல்வேறு தொந்தரவுகள், உபாதைகள் இருந்துக்கிட்டே இருக்குது. தாளவாடி டாக்டர்கள் தவறான ஆபரேஷன் செய்ததன் விளைவு நான் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம், அதற்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்கள். கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் பணத்திற்கு எங்கே செல்வோம்? என்னை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான அறுவை சிகிச்சையை அரசாங்கம் செய்யவேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த அந்த மருத்துவரை தண்டிக்க வேண்டும். அரசு மருத்துவமனையை நம்பிச் சென்று குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தேன். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்திற்கு நக்கீரன் மூலமாக கொண்டுசென்று எனக்கு உரிய நீதியும், நிவாரணமும் பெற்றுத் தாருங்கள்” என்றார் பாதிக்கப்பட்ட அனுபல்லவி.

ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடமும் மனு கொடுத்தார். மருத்துவர் குழுவை அழைத்து உடனடியாக என்ன செய்யவேண்டும் என பாருங்கள் என்றார். அந்த மருத்துவர்கள் குழு அறிக்கை தருவதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டது.

அரசு மருத்துவர்களால் பாதிப்புக்குள்ளான அனுபல்லவிக்கு தாமதமின்றி நீதியும், நிவாரணமும் கிடைக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உதவுவாரா?