Skip to main content

'நீட் தேர்வால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கைக்கு மாணவர்கள் வந்துவிட்டார்கள்'-அண்ணாமலை பேச்சு

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

BJP

 

நீட் தேர்வால் அனைவருக்கும் சம வாய்ப்பை மத்திய அரசு சாத்தியமாக்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ''இந்த வருடம் தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு சாதனை வருடம். நீட் ஆரம்பித்த  2016க்கு பிறகு  இந்த ஏழு எட்டு வருடத்தில் இந்த வருடம் தான் அதிகமான குழந்தைகள் நீட் தேர்வு எழுத வருகிறார்கள். தமிழகத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இந்த வருடம் 18 லட்சம் பேர் இந்தியாவில் நீட் எழுதப் போகிறார்கள். தமிழகத்தில் போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் 30 ஆயிரம் மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்குக் கூடுதலாக வந்திருக்கிறார்கள். கடந்த வருடம்  தமிழகத்தில்  ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதிலிருந்து என்ன நமக்கு தெரிகிறது என்றால் மாணவர்கள் நீட் தேர்வை முழுமையாக ஏற்றுக்கொண்டு இதன் மூலமாகத்தான் நல்ல ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு வந்திருக்கிறார்கள். அதிலும் அடுத்த சிறப்பு என்னவென்றால் உங்களுடைய தாய்மொழியில் எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு. இந்தியாவில் இந்தியைத் தாண்டி, ஆங்கிலத்தை தாண்டி, அடுத்து குஜராத்தி, அடுத்து பெங்காலி, நான்காவது பிராந்திய மொழியாக தமிழ் இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் 39 ஆயிரத்து 300 பேர் தமிழ் மூலமாக நீட் தேர்வு எழுதப் போகிறார்கள். இவ்வளவு பேர் நீட் தேர்வு எழுத வந்திருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக இந்த நீட் தேர்வு எல்லோருக்கும் சம வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

உயர் மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் ‘0’ மதிப்பெண்ணாக நிர்ணயம்!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Neet cut off for higher medical studies fixed as '0' marks

உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் கட் ஆப் மதிப்பெண்ணைப் பூஜ்ஜியமாக குறைத்து தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரம் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த சூழலில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரம் இடங்களை நிரப்ப கட் ஆப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு பூஜ்ஜியமாக நிர்ணயித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஆயிரம் சிறப்பு மருத்துவ இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

vck ad

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கட்டணமாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ.  2.5 கோடி முதல் 2.5 கோடி வரை வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டில் நீட் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான மதிப்பெண்ணை 20 சதவீதமாக தேசிய மருத்துவ ஆணையம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.