Skip to main content

பல்கலைக்கழக வளாகத்தில் வீலிங் செய்த மாணவர்... எதிரே வந்த சமையல் தொழிலாளி உயிரிழப்பு!

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

The student who did the wheeling on the university campus

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மாலை மற்றும் காலை நேரங்களில் முக்கிய சாலைகளில் மாணவர்கள் மாணவிகள் மத்தியில் கெத்து காட்டுவதற்காக இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று சக்கரத்தை தூக்கும் வகையில் சாகசம் என்ற தோரணையில் வீலிங் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

மேலும் சிதம்பரம் நகரின் முக்கிய தெருக்களில் மாலை நேரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனத்தை வாலிபர்கள் மற்றும் மாணவர்கள் ஓட்டிச் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்னல் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் பல்வேறு விதமான விபத்தில் சிக்கி  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

 

இந்த நிலையில்  அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் தர்ஷன் (19) ஜேப்பியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்வி பயின்று வருகிறார். இவர்  அதிக திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்துள்ளார். அப்போது இவருக்கு எதிரே வந்த சிவஜோதி நகர் கம்பர் தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன் ( 55 ) சமையல் தொழிலாளியின் இருசக்கர வாகனத்தின் மீது மாணவரின் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு புருஷோத்தமன் ராஜாமுத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

 

சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். அதேநேரத்தில் பெற்றோர்களும் பணம் உள்ளது என்பதற்காக மாணவர்களுக்கு அதிக திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தை அதிக விலை கொடுத்து வாங்கி கொடுப்பதால் அவர்களுக்கு அதனுடைய வலி தெரியாமல் மற்றவர்கள் மீது ஏற்றி விபத்து ஏற்படுத்தி உயிர்பலி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இந்த செயலுக்கு மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.