Skip to main content

மாணவன் வெட்டிப் படுகொலை! சக மாணவன் கைது

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Student passed away police arrested his friend

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ள டி. கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது பதினேழு வயது மகன் கோகுல் இவர் திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு இவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் வெகுநேரமாகியும் கோகுல் வீடு திரும்பவில்லை. அவரது தாயார் ஜெயபாரதி கோகுல் வைத்திருந்த செல்போனை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தனது உறவினர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் தேடியுள்ளனர்.


இந்த நிலையில், நேற்று காலை 6 மணி அளவில் திருக்கோவிலூர் புறவழிச்சாலை பெட்ரோல் பங்க் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உடலில் வெட்டுக் காயங்களுடன் கோகுல் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த டி.எஸ்.பி பழனி, திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் பேனா கத்தி, வீச்சரிவாள் ஆகியவை கிடைத்துள்ளன. இதையடுத்து கோகுலின் தாயார் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில், கோகுல் உறவினர்கள் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளி விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனர். 

 

அதன்படி போலீசார், கோகுலுடன் படிக்கும் கனகநந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக பள்ளி மாணவனை (17 வயது) சந்தேகத்தின் பேரில் தேடி பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், “நான் குண்டாக இருப்பதை கண்டு என்னை கோகுல் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டிருந்தான். நேற்று முன்தினம் என்னை கிண்டல் செய்யும் போது என்னை சீண்டி அசிங்கப் படுத்தினான். இதனால் கடும் கோபமடைந்த நான், அவனை பழிவாங்க முடிவு செய்தேன். அதன்படி வெளிப்படையாக கோபத்தைக் காட்டாமல் இருசக்கர வாகனத்தில் கோகுல் வீட்டுக்குச் சென்று அவனை ஓட்டலுக்கு சாப்பிட போகலாம் என்று நட்பாக பேசி  அழைத்து வந்தேன். 

 

வரும்போது திருக்கோவிலூர் புறவழிச்சாலை பெட்ரோல் பங்க் அருகே காட்டுப் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் சிறுநீர் கழிப்பதாக கூறி இறங்கி கொஞ்ச தூரம் நடந்து சென்றோம். அப்போது நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினேன். இதை எதிர்பார்க்காத கோகுல், என்னிடம் எதிர்த்து சண்டைக்கு வந்தான். அப்போது நான் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து அவனை சரமாரியாக வெட்டினேன். அவன் தன்கையால் தடுத்தபோது கை துண்டானது. நிலை தடுமாறி கீழே விழுந்த கோகுலை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டேன்” இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் தெரிவித்தார். 


இந்த வாக்குமூலம் அளித்தபோது அந்த மாணவன் கதறி அழுததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும் ஒத்த வயதுள்ள ஒரு மாணவன் ஒருவன் மட்டுமே கொலை செய்திருக்க முடியுமா? இன்னும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்து உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.