Skip to main content

மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு; கொலையா என காவல்துறை விசாரணை

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

 

student incident police investigation in dharmapuri district



தர்மபுரி அருகே வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிச்சென்ற பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள பழையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் மோனிகாஸ்ரீ (வயது 16). சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

 

சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வில் மோனிகாஸ்ரீ சுமாரான மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் நன்றாகப் படிக்கும் படி அவருடைய பெற்றோர் அடிக்கடி அறிவுரை கூறி வந்துள்ளனர். 

 

இதனால் விரக்தியடைந்த அவர், நவ. 14 ஆம் தேதி திடீரென்று பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். உடன் படிக்கும் தோழிகள், உறவினர்களிடம் விசாரித்தனர். ஆனாலும் மகள் சென்ற இடம் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. 

 

இந்நிலையில், ஆத்துக்காடு பகுதியில் உள்ள காவிரி ஆறு அருகே மோனிகாஸ்ரீ அணிந்து சென்ற காலணிகள் கிடந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை காவல்நிலைய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் காவிரி ஆற்றங்கரையோரம் மோனிகாஸ்ரீயை தீவிரமாகத் தேடினர். இந்நிலையில், காவிரி ஆற்றங்கரையோரம் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

 

சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரும்பாலை காவல்துறையினர், மோனிகாஸ்ரீ குளிக்கச் சென்ற போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தாரா? மர்ம நபர்கள் அவரைக் கொலை செய்து விட்டு சடலத்தை வீசிச் சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

வீட்டிலிருந்து மாயமான பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பழையூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.