Skip to main content

“கோவில் ஊழியர்களை இடமாற்றம் செய்யாவிடில் போராட்டம் நடத்தப்படும்” ஊராட்சிமன்ற தலைவர் கடிதம்!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020
“Struggle will continue if temple staff are not relocated” says Panchayat President

 

கடலூர் மாவட்டம் விருதாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக கரோனா ஊரடங்கால்  கோவில் பூட்டப்பட்டுள்ளது. அதே சமயம் கோவில் குருக்கள் சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து, வழிபாட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் வளாக நந்தவனத்தில் அமர்ந்து கோவில் ஊழியர்கள் மது குடிப்பதும், மாமிசம் சாப்பிடுவதும், இயற்கை உபாதைகள் கழிப்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அதையடுத்து கோவில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் ஆகிய இருவரையும் இந்து அறநிலையத்துறை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தது. இதனிடையே கோவிலின் மற்றொரு ஊழியரான ஆனந்தகுமார் மற்றொரு தரப்பினர் குறித்து வசைபாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்தநிலையில் கொளஞ்சியப்பர் கோவில் ஊழியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தியாக.நீதிராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "மணவாளநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொளஞ்சியப்பர் கோவிலில் சமீப காலமாக தொடர்ந்து ஊழியர்கள் கோவில் நிர்வாகத்திற்கும்,  பாரம்பரியமிக்க கோயிலுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனை சரி செய்யும் நோக்கத்தோடு கோவில் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமல், கோவில் பக்தர்கள் அதிர்ச்சி அடையாமல் இருக்கவும் அரசு விதிப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களை உடனடியாக பணியிடை மாற்றம் செய்து புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

 

“Struggle will continue if temple staff are not relocated” says Panchayat President


  
மேலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கும் பொருட்டு பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்'  என அதில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த மனு கடலூர் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.