Skip to main content

“கள் இறக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்” - விவசாய சங்கத் தலைவர் நல்லுசாமி

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

"The struggle to get down toddy will be extended across Tamil Nadu" - Nallusamy, President of the Farmers Union

 

கள் இறக்கும் உரிமைப் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நல்லுசாமி கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நல்லுசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட இந்த ஆட்சியில் அளவுக்கு அதிகமான அளவில் மணல் அள்ளப்படுகிறது. எனவே அரசு அதனை கட்டுப்படுத்தி வரைமுறைப்படுத்த வேண்டும். எம்.சாண்டு, பி.சாண்டு விற்பனையை அதிகரித்து மணல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். 

 

கள் இறக்குவதற்கு 33 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வருகின்ற ஜனவரி 23 ஆம் தேதி கள் இறக்கும் உரிமை மீட்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். தமிழக முதல்வர்  அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி கள் மீதான தடையை நீக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. 

 

குஜராத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான தேவையற்ற இலவசங்களை அந்த மாநிலத்தில் அறிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்வதோடு, பாராளுமன்றத்தில் இலவசத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எப்படி சம்பள கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் விவசாய கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

 

பழவகைகளை பயன்படுத்தி பிராந்தி, விஸ்கி, ஓட்கா உள்ளிட்ட மதுபானங்களை தயாரிக்க வேண்டும். கரும்பின் கழிவு பொருளான மொலாசிஸ் கொண்டு மது தயாரிப்பது பலருடைய உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது. விவசாய பயிர் காப்பீடு என்பது தனி நபர் காப்பீடு போல இருந்தால் தான், விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள். மேலும் காலநிலையை ஒட்டிய காப்பீட்டை மத்திய மாநில அரசுகள் ஏற்க முன்வர வேண்டும். அதில் அரசின் பங்களிப்பை தந்து ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் வாழை விவசாயிகள் சங்கத்தலைவர் கணபதி, காவிரி பாசன விவசாயிகள் சங்க செயல்தலைவர் ராஜாராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .