Skip to main content

‘சமத்துவத்தின் சின்னம்’ ... அண்ணல் அம்பேத்கருக்கு அமெரிக்காவில் சிலை 

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

statue of equality Ambedkar in America

 

அமெரிக்கா, மேரிலாந்தில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ள அம்பேத்கரின் 19 அடி சிலையை நிறுவப்படவுள்ளது.

 

கடந்த 1891 ஆண்டு ஏப்ரல் 14, ஆம் தேதி பிறந்த டாக்டர். பீம் ராவ் அம்பேத்கர் அரசியலமைப்புச் சபையின் மிக முக்கியமான வரைவுக் குழுவின் தலைவராக இருந்து, இந்திய அரசியலமைப்பை உருவாக்க பெரும் பங்காற்றினார். இதனால், ‘இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி’ என பெருமையாக அழைக்கப்பட்டார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் சட்டம் மற்றும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர். தனது இறுதி மூச்சு வரை இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய சமூக இயக்கங்களில் அம்பேத்கர் தனிச் சிறப்பு மிக்கவர். இப்படியாகத் தனது வாழ்க்கை முழுவதும் படிப்பு, சமூகப் பணி என உழைத்தவர் இறுதியாக அம்பேத்கர் டிசம்பர் 6, 1956 அன்று இறந்தார்.

 

இந்த நிலையில், மேரிலாந்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (ஏஐசி) 'சமத்துவத்தின் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை அக்டோபர் 14 தேதி திறக்க உள்ளனர். 19 அடி உயரம் என சொல்லப்படும் இந்த சிலையை, ராம் சுதார் என்ற புகழ்பெற்ற சிற்பியை வைத்து வடித்துள்ளனர். இவர் இதற்கு முன்பாக சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் சிலை குறித்து அம்பேத்கர் சர்வதேச மையம் (ஏஐசி) கூறுகையில், “இதுதான், இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் நிறுவியுள்ள பாபாசாகேப்பின் மிகப்பெரிய சிலை. மேலும் இந்த மையத்தில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் நினைவகத்தின் ஒரு பகுதியாகவும் இது நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான அம்பேத்கரிய இயக்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் இந்த சிலை திறப்பு நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நினைவுச்சின்னம் அம்பேத்கரின் கருத்துகளையும், போதனைகளைப் பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக விளங்கவும் உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதைத் தவிர்த்து உலகநாடுகளில் அம்பேத்கர் சிலைகள், வால்வர்ஹாம்ப்டன், இங்கிலாந்து- கொலம்பியா பல்கலைக்கழகம், அமெரிக்கா- சஜோக,ஹங்கேரி - கொயாசன் பல்கலைக்கழகம், ஜப்பான்- சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அமெரிக்க இளைஞர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Chennai police registered a case against the American youth

 

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

சென்னையில் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் அலெக்ஸ் (வயது 22) என்பவர் மதுபோதையில் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், காவலர்கள், வாகன ஓட்டிகளை எனப் பலரையும் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் காவலர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகளைத் தாக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸை கைது செய்து அவர் மீது 6 பிரிவுகளில் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் முதல் முறையாக மது அருந்தியதால் ஏற்பட்ட போதையால் சாலையில் ரகளையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டிப்ளமோ படித்துள்ள இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சோலர் நிறுவனத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். இவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் இவரைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சோதனை சாவடியில் கார் வெடித்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Car on bridge accident; 2 people lost their lives in america

 

பாலத்தில் வந்த கார் திடீரென்று வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்கா நாட்டிற்கும், கனடா நாட்டிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சி அருகே ரெயின்போ பாலம் உள்ளது. இதன் அருகே அமெரிக்கா - கனடா எல்லை சோதனை சாவடி இருக்கிறது. இங்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்த போது அங்கு வந்த கார் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. உடனே, இதனை பார்த்த அதிகாரிகள், அங்கு சென்று பார்த்த போது, அந்த காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தனர். 

 

பாலத்தின் எல்லையில் வந்த வாகனம் ஒன்று வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் புலன் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த இந்த கார் வெடிப்பு சம்பவத்தை நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்