SRI LANKA TAMILARS TRICHY PRISON

திருச்சி முகாம் சிறையில் அடைக்கபட்டுள்ள இலங்கை தமிழர்கள் கடந்த ஜூன் 9- ஆம் தேதி முதல் இன்றுவரை கடந்த 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த போராட்டத்தின் நோக்கம் தங்கள் மீதான வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கபட்டு, தண்டனை காலம் முடிந்தும் சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டதினை நடத்தி வருகின்றனர்.

Advertisment

அவர்களின் போராட்டத்தைக் குறித்து அறிந்துக் கொள்ள அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையகத்தின் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் நேரில் சந்தித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அவர்களின் கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இலங்கை தமிழர்கள் தங்களது காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

Advertisment