Skip to main content

பண்டிகை காலக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்கள்! 

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

Special trains to avoid festive rush!

 

பண்டிகை காலக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, கர்நாடகாவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. யஷ்வந்த்பூர்- நெல்லை, மைசூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதன்படி, வரும் அக்டோபர் 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் யஷ்வந்த்பூர், நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். இன்றும், நாளையும் மைசூர், தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் (படங்கள்)

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

சென்னை பெருநகர காவல்  ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப இன்று (10-11-23) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர்,  ரங்கநாதன் தெரு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். 

Next Story

60 சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

nn

 

தீபாவளி பண்டிகைக்காக 60 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மொத்தம் 12 வழித்தடங்களில் 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

சென்னையிலிருந்து நாகர்கோவில், நெல்லை நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. கொச்சுவேலியில் இருந்து பெங்களூரு, சென்னையிலிருந்து சந்திரகாச்சி, சென்னையிலிருந்து புவனேஸ்வர், நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் ஆகிய இடங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

 

தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் இடையே நவம்பர் 10, 17, 24 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. நவம்பர் 11, 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து மங்களூர், எர்ணாகுளத்தில் இருந்து தன்பாத் இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

 

தீபாவளி பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களிலிருந்தும் தென்னிந்தியாவிற்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. அதேபோல் சென்னையிலிருந்து நெல்லை இடையே நாளை வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.