Skip to main content

தனியார் மதுபான கூடத்தில் சிறுவன்;சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

nn

 

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே பிரபல தனியார் ஹோட்டல் உள்ளது. இங்கு அரசு அங்கீகாரம் பெற்ற மதுபானக் கூடமும் உள்ளது. இங்குள்ள மதுபான கூடத்தில் ஒரு டேபிளில் மூன்று இளைஞர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். அதில் ஒருவன் அருகில் சிறுவன் ஒருவன் அமர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சிறுவர்களை மதுக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில் அனுமதிக்ககூடாது என நீதிமன்றங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்குவது சட்டப்படி குற்றம் என்கிற நிலையில் ஒரு சிறுவனை மது அருந்தும் பார்க்குள் எப்படி அனுமதித்தார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. பணம் வந்தால் போதும் என விதிகளை மீறி குடிமகன் ஒருவன் சிறுவனை அழைத்து வந்து மதுபான பார் நிர்வாகம் தடுக்கவில்லை. சுமார் அவர்கள் தடுக்காமல் நிர்வாகமும் அலட்சியமாக செயல்பட்டுள்ளது.

 

தமிழக இளைஞர்கள் அடிமையாகி வரும் நிலையில் மதுபானக் கூடத்தில் சிறுவன் அமர வைக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடத்துக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லக்கூடாது எனவும், அவர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என சட்டம் உள்ளது என்றும், ஆனால் மதுபானக் கூடம் உள்ளே சிறுவனை அனுமதித்தது மட்டுமின்றி, அவன் முன்பு மதுபாட்டில் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், எதுவும் அறியாத மழலையின் நெஞ்சில், விஷம் விதைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆய்வு செய்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சிறுவர்கள் படிக்கவேண்டும், அவர்கள் மீது சமூக அழுத்தங்கள் எதுவும் பள்ளி முதல் வீடு வரை எங்கும் இருக்கக்கூடாது என்பதற்காக அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சிறுவர்கள், மாணவர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுத்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் தனியார் மதுபான பாரில் சிறாரை அனுமதித்த நிர்வாகம் மீது அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்துள்ளது. ஆனால் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ அதுக்குறித்து முறையான விசாரணை கூட இன்னும் நடத்தவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.