Skip to main content

சிக்ஸ்டி ப்ளஸ் முதியோர் மேலாண்மை நிகழ்ச்சி; அறுபது வயதை தாண்டிய சாதனையாளர்கள் கெளரவிப்பு

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

Sixty Plus Elderly Management Programme; Achievements beyond the age of sixty are honoured

 

கடந்த மார்ச் 03, 2023 அன்று 60பிளஸ் லைப் என்னும் வயது முதிர்ந்தவர்களுக்கான (குறிப்பாக அறுபது வயது தாண்டிய) கலை மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி முத்தமிழ் பேரவை, அண்ணாமலைபுரத்தில், சென்னையில் நடந்து முடிந்தது. 60பிளஸ் இந்தியா (60Plus India) என்னும் முதியோர் மேலாண்மை நிறுவனம்  இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை செய்துள்ளது.

 

நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக ட்ரீம் தமிழ்நாடு இணை நிறுவனர், கிஸ்ப்பிலோ நிறுவன தலைமை நிர்வாகி மற்றும் கிரசன்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சிலின் (Cresent Innovation and Incubation Council) தலைமை நிர்வாக அதிகாரி, PMI யின் தலைவரான திரு.பர்வேஸ் ஆலம் அவர்களும் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாதனைகள் மற்றும் கலாச்சாரத் திறமைகளையும் கொண்டாடுவதுடன், அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் தளத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. விழாவை சிறப்பித்த மதிப்புமிக்க விருந்தினர்கள், சமுதாயத்தில் முதியோர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் சமுதாயத்திற்கு அதன்வழி ஏற்படுத்தும் தாக்கத்தையும் சுட்டிக்காட்டி பேசினார். விருது பெற்றவர்களில் ஓய்வுபெற்ற நூலகர்  பாலம் கல்யாணசுந்தரம் (குழந்தைகளுக்கான சமூக நல அமைப்பான “பாலம்” என்னும் அமைப்பின் நிறுவனர் , தன் ஓய்வூதிய நீதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியவர். காண்ட்ராக்ட் குழந்தைநல மருத்துவர் டாக்டர் எஸ்.சசிகலாதேவி, தன் 65 வயதிலும் நீச்சல் வீராங்கனையாக சமூகத்தில் பெரும் தாக்கத்தை படைத்த இவர்களை போன்றோர் மக்களுக்கு பெரும் உதாரணமாக திகழ்கின்றனர். நிகழ்வின் முக்கிய பகுதியாக, 60பிளஸ் நிறுவனத்தின் 60பிளஸ் இந்தியா மொபைல் செயலியை கிருத்திகா உதயநிதி காட்சிப்படுத்தினார்.  இந்த செயலி முதியோர்களுக்கான அன்றாடப் கடமைகள்  மற்றும் செயல்பாடுகளை நிர்வகிப்பதை திறம்பட செயல்படுத்த பல்வேறு அம்சங்கள் பயனாளர் இலகுவாக அமைத்திருப்பதே இந்த சிறப்பம்சம்.

 

60 வயதிற்கு மேற்பட்டவர்களின் சாதனைகளைக் கௌரவித்து  கொண்டாடி  நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவுப்படுத்தினர். நிகழிச்சியில் பங்குபெற்ற விருந்தினர்களும், பார்வையாளர்களும் மனமகிழ்ச்சியுடன் தங்கள் தனி திறமைகளை வெளிக்கொணரும் உத்வேகத்துடன் நிகழ்ச்சியை நிறைவுசெய்து சென்றனர். இந்த நிகழ்வு மகிழ்ச்சியான வாழ்கையை வாழ்வதற்கு முதுமை என்றுமே தடையில்லை என்பதை நிரூபித்து காண்பித்துள்ளது.

 

60பிளஸ் இந்தியா மொபைல் செயலியின் வளர்ச்சி, முதியோர் வாழ்கையை இன்டர்நெட் துணையுடன் மேம்படுத்தும் முயற்சி. முதியவர்களின் நல்வாழ்வை 60பிளஸ் இந்தியா நிறுவனம் தனது கடமையாக கருத்துவதற்கான சான்றாகும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.