Skip to main content

சிவகாசி மாநகராட்சி: “திமுகவில் அகழ்வாராய்ச்சி நடத்தணும்..” - மேயர் தேர்வில் அதிருப்தி குரல்!

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

Sivakasi Corporation: "DMK will conduct excavations .." - Dissatisfied voice in the mayoral election!

 

சிவகாசியில் காங்கிரஸ் மேயர் என்ற நினைப்பை முளையிலேயே கிள்ளிவிட்ட நிலையில், நாடார் சமுதாயத்தவரை மேயராக்க வேண்டும்  என்ற கோரிக்கையின் பலனாக, சங்கீதாவை சிவகாசி மாநகராட்சியின் மேயர் நாற்காலியில் அமரவைத்த திமுக, தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த விக்னேஷ் பிரியாவை துணை மேயராக்கி இருக்கிறது. அதேநேரத்தில், கட்சியினரிடம் பரவலான  அதிருப்தியைச்  சம்பாதித்துள்ளது. காரணம், சிலரது எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான்.  

 

அந்த திமுக சீனியர்    “கட்சிக்காக உழைத்தவர்களெல்லாம் கானல் நீராகிப்போக, எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம் திடீர் நதியாக மாறிப்போனது ஏனோ? அமாவாசைகளை உருவாக்கிவிட்டனரே! அகழ்வாராய்ச்சியை நிலத்தில் நடத்துவதெல்லாம் சரிதான். அத்தகைய ஆய்வு மேயர் தேர்வில் காணப்படவில்லையே? இது தலைமையே எடுத்த முடிவு என்று பொய் சொன்னால், யாரும் நம்புவதற்கில்லை.” என்று விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளை ஒரு பிடிபிடித்தார்.  

 

நாடார் சமுதாயத்தில் பாரம்பரியமுள்ள பெரும் செல்வந்தர்களை மட்டுமே ஏற்கும் மனநிலைகொண்ட சிவகாசியில்,  மேயர் சங்கீதாவின் கணவர் இன்பம் அதே சமுதாயத்தவராக இருந்தும், அந்நியராகப் பார்க்கப்படுகிறார். சுபாஷ் பண்ணையார், ராக்கெட் ராஜா போன்றவர்களோடு தொடர்பில் உள்ள இன்பத்தின் பிம்பத்தை பலரும் ரசிக்கவில்லை. தொழிலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் சிவகாசி, யாராலும்  ரவுடி ராஜ்ஜியம் ஆகிவிடக்கூடாது என்ற பீதி வெளிப்படுகிறது. அதனாலோ என்னவோ,   துணை மேயர் விக்னேஷ் பிரியா பதவியேற்றபோது வெளிப்பட்ட சமுதாய ரீதியிலான ஆரவார ஆதரவை,  சங்கீதா பதவியேற்றபோது காணமுடியவில்லை. அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்ட மேயர் பதவியேற்பு நிகழ்வில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகனும் சுத்தமாக மிஸ்ஸிங். 

 

முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஞானசேகரன் எதிர்பார்ப்போடுதான் காங்கிரஸிலிருந்து விலகி திமுகவுக்கு வந்தார். தன்னை துணை மேயர் ஆக்குவார்கள் என்ற அவரது நம்பிக்கை பொய்த்துப்போனது. முன்னாள் திருத்தங்கல் நகர்மன்றத் துணைத்தலைவர் (அதிமுக) பொன் சக்திவேலின்   கவுன்சிலர் மனைவி அழகுமயிலுக்கு துணை மேயர் பதவியைப் பெற்றுத் தருவோம் எனத் தூபம் போட்ட சிலர்  ‘ராஜேந்திரபாலாஜியின் தீவிர விசுவாசிகளான அத்தனைபேரும் அவரைத் தனிமரமாக்கிவிட்டு மொத்தமாக திமுகவுக்கு வருவதால், திமுக தலைமையின் மனம் குளிரும். அதனால்தான் இது சாத்தியம்.’ என்று நம்பிக்கையூட்டி  பொன் சக்திவேல், சீனிவாசன், பலராமன் உள்ளிட்டோரை, இரட்டை இலையில் வெற்றிபெற்ற 9 கவுன்சிலர்களோடு திமுகவுக்கு அந்தர் பல்டி அடிக்கவைத்தனர். கடைசியில் அழகுமயிலுக்கு கிடைத்தது அல்வாதான்.  மேயர் பதவியை எதிர்பார்த்து கிடைக்காத கம்மவார் சமுதாயத்தினரிடமும் அதிருப்தி நிலவுகிறது.

 

Sivakasi Corporation: "DMK will conduct excavations .." - Dissatisfied voice in the mayoral election!

 

‘இந்த சங்கீதாவும் இன்பமும் யார்? கட்சிக்காரர்களுக்கே தெரியவில்லை. எப்படித்தான் தேடிப்பிடித்தார்களோ? ரூ.6 கோடி கைமாறியதாம்?’ என்ற திமுகவினரின் பொதுவான குமுறலை, மேயர் சங்கீதாவிடம் கூற முயன்றபோது,  ‘காதலுக்கு மரியாதை’ தருபவர் எனச் சொல்லப்படும் கணவர் இன்பம் லைனில் வந்தார்.  “காங்கிரஸ் எங்க கூட்டணி கட்சிதான். ஆனா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன், சங்கீதா தோற்கணும்னு உள்ளடி வேலை பார்த்தார். சங்கீதாவுக்கு மேயர் சீட் கிடைக்கிறதுக்கு நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் அண்ணனும் ஸ்டெப் எடுத்தார். நான் பரம்பரை பணக்காரன் கிடையாது. நாலு பேரு நாலுவிதமா பேசத்தான் செய்வாங்க. எங்க கட்சிக்குள்ள போட்டியும் பொறாமையுமா இருக்கு. யாரும் புதுசா கட்சிக்குள்ள வந்து விடக்கூடாது. யாருக்கும் பதவி கிடைத்து விடக்கூடாது. இதுலயே குறியா இருக்காங்க. இப்ப எனக்கு எதிரா ரவுடிங்கிற ஆயுதத்தை கையில எடுக்கிறாங்க. எந்த ஆதாரமும் இல்லாம குற்றம் சுமத்துறாங்க.   யாரையும் வாழவைத்துத்தான் எங்களுக்கு பழக்கம். மக்களுக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கோம். மேயராகி சம்பாத்தியம் பண்ணனும்கிற எண்ணம் துளியும் இல்ல. ஆண்டவனுக்கு பொதுவா சொல்லுறேன், என் மனைவி சங்கீதாவை மேயர் ஆக்கணும்னு சொல்லி யாருக்கும் பத்து பைசா கூடா கொடுக்கல.” என்றார். 

 

மேயர் சங்கீதாவோ “சிவகாசி மக்களின் குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்த்துவைப்பேன். 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று  நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.