Skip to main content

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது பரபரப்பு புகார்; பெண் கவுன்சிலர்கள் அதிரடி!

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

Sensational complaint against former minister Thangamani; Female Councilors Action!

 

குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தாகக் கூறி, முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பெண் கவுன்சிலர்கள் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் 16- வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் பூங்கொடி வெங்கடேசன். இவரும், 1- வது வார்டு கவுன்சிலர் ரேவதி திருமூர்த்தி, 17- வது வார்டு கவுன்சிலர் நந்தினிதேவி ராஜகணேஷ் ஆகியோரும் குமாரபாளையம் காவல்நிலையத்தில் மார்ச் 30- ஆம் தேதி தனித்தனியாக ஒரு புகார் மனு அளித்தனர். 

 

புகார் மனுக்களில் கூறியுள்ளதாவது, "குமாரபாளையம் நகராட்சித் தேர்தலில் நாங்கள் மூன்று பேரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றோம். இந்நிலையில் மார்ச் 4- ஆம் தேதி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. இந்த பதவிக்கு தி.மு.க. சார்பில் கவுன்சிலர் சத்தியசீலன் போட்டியிட்டார். 

 

முன்னாள் அமைச்சர் தங்கமணி, குமாரபாளையம் அ.தி.மு.க. இளைஞரணி நகரச் செயலாளர் பாலசுப்ரமணியன், அவைத்தலைவர் பழனிசாமி, 22- வது வார்டு கவுன்சிலர் புருஷோத்தமன், ஜெயலலிதா பேரவை நகர பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் சத்தியசீலனுக்கு வாக்களிக்கும்படி எங்களை கட்டாயப்படுத்தினர். 

Sensational complaint against former minister Thangamani; Female Councilors Action!

அதற்கு நாங்கள், அ.தி.மு.க. உறுப்பினராக இருந்து கொண்டு எதற்கு தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க வேண்டும்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், நாங்கள் சொன்னதைச் செய்ய வேண்டும்; எதிர்த்துக் கேள்வி கேட்கக் கூடாது என்று மிரட்டினர். 

 

இந்நிலையில், 31- வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் விஜய்கண்ணன், மறைமுகத் தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றார். அவர் தலைவராக வெற்றி பெற்றதற்கு நாங்கள்தான் காரணம் என்று கூறி, முன்னாள் அமைச்சர் தங்கமணி, பாலசுப்ரமணி உள்ளிட்டோர் எங்கள் மீது ஆத்திரம் அடைந்து, எங்களை கட்சியை விட்டு நீக்கினர். 

 

கடந்த புதன்கிழமை (மார்ச் 30ம் தேதி) காலையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், பழனிசாமி, புருஷோத்தமன், ரவி, பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் 20- க்கும் மேற்பட்டோர் எங்கள் மூன்று பேரின் வீட்டிற்குள் நுழைந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறிய பிறகும், அதை எதிர்த்து நீ விஜய்கண்ணனுக்கு ஓட்டு போட்டிருக்கிறாய். எங்களால்தான் நீ குமாரபாளையத்தில் செல்வாக்கு பெற்றாய். 

 

இனி குமாரபாளையத்தில் உன் செல்வாக்கை சீர்குலைத்து, உன் தொழிலை நாசமாக்கி விடுவோம். இனி நீ நிம்மதியாக வாழ முடியாது. ஏன்டா இவர்களை பகைத்துக் கொண்டோம் என்று நீயும் உன் குடும்பத்தினரும் அழப்போகிறீர்கள் என்றும் மிரட்டினர். ஆபாச வார்த்தைகளாலும் திட்டினர். 

Sensational complaint against former minister Thangamani; Female Councilors Action!

இதனால் என் குடும்பத்தார் உயிருக்கு பயந்து கொண்டு சத்தம் போட அ.தி.மு.க.வினரும், உடன் வந்த அடியாள்களும் சத்தம் போட்டால் உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமில்லை என்று மிரட்டினர். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், 'எங்களை பகைத்துக் கொண்ட உங்களுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள்,' என்று மிரட்டி விட்டு கிளம்பிச்சென்று விட்டனர். 

 

அவர்களால் எங்களுக்கு உயிர் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எதற்கும் துணிந்தவர்கள். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்." இவ்வாறு பெண் கவுன்சிலர்கள் புகார் மனுக்களில் தெரிவித்துள்ளனர். 

 

காவல்நிலையத்தில், புகார் மனுக்களை கொடுக்கும்போது பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்துள்ளனர். இந்த புகார் மனுக்கள் பெற்றுக் கொண்டதற்காக இன்னும் குமாரபாளையம் காவல்நிலையம் தரப்பில் சிஎஸ்ஆர் ரசீது கூட வழங்கப்படவில்லை என்றனர் மனுதாரர்கள். 

 

இது தொடர்பாக குமாரபாளையம் காவல்நிலையம் தரப்பில் விசாரித்தபோது, ''பெண் கவுன்சிலர்கள் அளித்த புகார் மனுக்கள் மீது இன்னும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சம்பவ இடத்தில் அவர் இல்லை,'' என்றனர். 

Sensational complaint against former minister Thangamani; Female Councilors Action!

சாமானியர்கள் மீது புகார் வந்தால் உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து, மாவுக்கட்டு டெக்னிக் வரை போகும் காவல்துறையினர், பட்டப்பகலில் பெண் கவுன்சிலர்களை அடியாள்கள் கும்பலுடன் சென்று அ.தி.மு.க. நிர்வாகிகள் மிரட்டியுள்ள போதும், புகார் மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

புகார் மீது சிஎஸ்ஆர் ரசீது கூட கொடுக்காமல் காவல்துறையில் அலட்சியமாக நடந்து கொள்வதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தலையீடு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.