Skip to main content

அரசியல் பிரமுகர் விரட்டி விரட்டி கொலை...-வாணியம்பாடியில் பரபரப்பு!

Published on 10/09/2021 | Edited on 11/09/2021

 

Sensation in Vaniyambadi!

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் வசீம் அக்ரம். வாணியம்பாடியில் சமூகநல ஆர்வலராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளராகவும் இருந்து வந்தார்.

 

செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் அவரை அவரது அலுவலகத்தில் இருந்து துரத்தி வந்துள்ளனர். சாலையில் ஓட ஓட விரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் சிலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சரமாரியாக வெட்டினர். அந்த கும்பலுக்கு பாதுகாப்பாக ஒரு விலை உயர்ந்த இன்னோவா கார் பின்னாடியே வந்தது. அவர்கள் வெட்டி முடித்தப்பின் அவர்களை ஏற்றிக்கொண்டு அந்தக்கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. வெட்டிய 6 பேரும் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளனர்.

 

இந்த தகவலை கேள்விப்பட்டு வாணியம்பாடி நகர மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். படுகொலை தகவல் காவல்துறைக்கு சொல்லப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர் உடல் கைப்பற்றப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Sensation in Vaniyambadi!

 

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கொலைக்காரர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தை கேள்விப்பட்டு முன்னாள் அமைச்சரான நிலோபர் கபில் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

 

இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? இன்னோவா காரில் வந்து பக்காவாக ப்ளான் செய்து கொலை செய்தார்கள் என்றால் இதன்பின்னால் மிகப்பெரிய ஆட்கள் இருக்க வாய்ப்புள்ளது என சந்தேகிக்கும் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. 

 

வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள் வாணியம்பாடி நகர பேருந்து நிலையத்தில் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் வாணியம்பாடி நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, டில்லி குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.