Skip to main content

களையெடுக்க கலெக்டர் அலுவலக ஊழியர்களை அனுப்புங்க! - ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயி

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

b

 

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் நடைபெறுவது வழக்கம். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்த வாரம் நடத்திய மனுநாளில், சிவகிரி வட்டம், நெல்கட்டும்செவல் கிராமத்திலிருந்து மகேஸ்வரன் என்ற விவசாயி அளித்த மனுவும் கோரிக்கையும் மிகவும் மாறுபட்டதாக உள்ளது.

 

ஏன் விவசாயியாகப் பிறந்தோம் என்று வெந்து நொந்து போயிருக்கும் பாவப்பட்ட விவசாயி என அந்த மனுவில் தன்னைக் குறிப்பிட்டுள்ள மகேஸ்வரன், விவசாய கூலி வேலைக்கு ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறைக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.  

 

அந்த மனுவில் ‘நான் சிவகிரி தாலுகா நெல்கட்டும்செவல் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் பிப்ரவரி - ஜூனில் கோடைக்காலப் பருவத்திலும், செப்டம்பர்-ஜனவரியில் மழைக்காலத்திலும் பயிர் செய்து வருகிறோம். இரு பருவத்திலும் பயிரின் வயதுக்கு ஏற்ப, முதல் 50 நாட்கள் வரை களை எடுப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கும், கடைசி 30 நாட்கள் வரை அறுவடைக்கும் கூலி ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். ஆனால்,  ஒவ்வொரு வருடமும் பயிர் பராமரிப்பு நேரத்திலும் அறுவடை நேரத்திலும், மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) எனப்படும் 100 நாட்கள் வேலைக்கு கிராம மக்கள் அனைவரும் சென்றுவிடுகின்றனர்.

 

அதனால்,  பயிரின் முக்கிய பிரச்சனையான களையெடுப்பிற்கு ஆட்கள் கிடைக்காமல்,  சில வருடங்களாக நாங்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறோம். அப்படியே ஆட்கள் கிடைத்தாலும்,  7 மணி நேர வேலை என்பது 100 நாள் வேலை காரணமாக,  4 மணி நேரமாகச் சுருங்கிவிட்டது. எனவே, பயிர் பராமரிப்புச் செலவு மேலும் அதிகமாகி விட்டது.  விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளோம். நான் சுமார் 3 ஏக்கர் பரப்பில் தற்போது பருத்தி பயிர் செய்துள்ளேன். எங்கள் பகுதியில் தற்போது MGNREGS திட்ட வேலை நடைபெறுவதால் களையெடுப்பதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை.

 

ஆகவே,  தங்கள் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் எவரேனும் இருப்பின்,  அவர்களை எனது நிலத்தில் களை எடுப்பதற்கு DEPUTATIONல் அனுப்பி வைத்து உதவ தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு அவர்களை அனுப்பி வைக்கும் பட்சத்தில்,  அவர்களுக்கான கூலி, பஞ்சப்படி(D.A),  பயணப்படி (T.A), மதிய உணவு என அனைத்தும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன். இத்துடன் எனது நிலத்தின் புகைப்பட நகலை இணைத்துள்ளேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

nn

 

நாம் விவசாயி மகேஸ்வரனை தொடர்புகொண்டோம்.  “குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் அந்த மனுவைக் கொடுத்தேன். மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து நியாயமான பதில் வரும்; விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.” என்றார்.

 

100 நாள் வேலைத் திட்டம், கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. பொருளாதாரத்தை உயர்த்தி, வறுமையை அகற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது ஆறுதலான விஷயமே. அதே நேரத்தில், விவசாயக் கூலி வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காமல், இயந்திரப் பயன்பாடு அதிகரிப்பதற்கும்,  விவசாயமே பண்ண வேண்டாமென்று பலர் வெளியேறுவதற்கும், விளைநிலங்கள் தரிசாக மாறுவதற்கும், 100 நாள் வேலைத்திட்டம் காரணமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இத்திட்டத்தில் விவசாயத்தை முழுமையாகச் சேர்த்து, கூலியை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.  

 

ஆட்சியர் அலுவலக ஊழியர்களை விவசாய நிலத்தில் களையெடுப்பதற்கு DEPUTATIONல் அனுப்பும்படி ஆட்சியரிடமே மகேஸ்வரன் மனு அளித்தது, குசும்பு அல்ல! விவசாயிகளின் வேதனையும் வலியும்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஊருக்குள் சிக்கிய அதிமுகவினர்; வேட்பாளரை லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
woman demanded justice after rejecting AIADMK candidate from Tenkasi constituency

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மிக வலுவாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவோடு இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டது. இதன் காரணமாக நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணியை கட்டமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வந்தார்.

அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றனர். பின்னர் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள பாஜக, வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயத்தில், பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது அதனுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு பாஜகவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரண்டு பெரிய கட்சிகளுமே பாஜக வை வீழ்த்த வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தொகுதியில் உள்ள பொதுமக்கள் வேட்பாளர்களிடம் தொகுதி பிரச்சனைகளை கூறி வாக்கு வாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதி,  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், வாணியம்பாடியில் உள்ள பெருமாள்பேட்டை, கதர்பேட்டை, கச்சேரி சாலை, உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்குள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டும், அங்குள்ள தர்பூசணி கடையில் தர்பூசணி பழம் விற்பனை செய்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் உதயேந்திரம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். மதிய நேரத்தில் வாட்டி வதைக்கும் வெயிலில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வாணியம்பாடி தொகுதியின் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணொருவர், எம்.எல்.ஏ செந்தில்குமாரை நிறுத்தியுள்ளார்.

அங்கு நின்ற அவரிடம் ஆவேசமாக பேசிய அந்தப் பெண், நான் இங்குள்ள பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். என்னை முன்னாள் அமைச்சர் கேசி.வீரமணி பணியில் சேர்த்து விட்டார். பின்னர் அதிமுகவை சேர்ந்தவர்களால் எனக்கு வேலை போனது. ஏன் என்னை வேலையை விட்டு தூக்கி விட்டீர்கள் எனக் கேட்டால் வாய் பேசுகிறேன் என்கிறார்கள். நான் எதற்காக வாய் பேசுகிறேன் என்று அவர்களுக்குத் தெரியுமா?... என அவரின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த அதிமுக  எம்.எல்.ஏ இந்த பேரூராட்சியில் திமுககாரர் தானே தலைவராக உள்ளார்... என்று மடக்கியுள்ளார். ஆனாலும் அவரை விடாமல் பேசிய அந்தப் பெண், எனக்கு வேலை போன போது, அதிமுகவினர் தான் இருந்தார்கள். எனக் கூறி கொந்தளித்துள்ளார். அப்போது அங்கு வந்த சில அதிமுக தொண்டர்கள் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உடனே பதிலடி கொடுத்த அந்தப் பெண், சார்... எனக்கும் உங்களுக்கும் பேச்சு இல்ல... நான் எம்.எல்.ஏ விடம்தான் பேசுகிறேன்.... உங்களிடம் பேசவில்லை... என எச்சரித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. அப்போது செய்வதறியாது தவித்து நின்ற அதிமுக எம்.எல்.ஏ, ஒருவழியாக அந்தப் பெண்ணிடம் சமாதானமாகப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.