Skip to main content

தமிழகக் கூலி தொழிலாளியை கொன்ற பால்ரஸ் குண்டுகள். – ஆந்திரா போலிஸ்சின் வெறி.

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
semmaram

 

கடந்த ஆகஸ்ட் 31ந்தேதி இரவு திருப்பதியை அடுத்த காளஸ்திரி வனப்பகுதியில், செம்மரம் வெட்டச்சென்ற 30 பேர் கொண்ட கும்பலை கண்டு அவர்களை பிடிக்க ஆந்திரா வனத்துறையினர் முயன்றதாகவும், அவர்கள் சிக்காமல் வனத்துறையினர் மீது கற்களை வீசிவிட்டு தப்பிஓடியதாகவும், தங்களை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் தாலுக்காவை சேர்ந்த கண்ணமலையை சேர்ந்த காமராஜ் என்பவரின் இடுப்பில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து சம்பவயிடத்திலேயே இறந்ததாகவும், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காளஸ்திரி போலிஸார் ஆகஸ்ட் 1ந்தேதி மதியம் தகவலை வெளியிட்டனர். 


ஆந்திரா வனத்துறையின் இந்த நடவடிக்கை தமிழக மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இது திட்டமிட்ட படுகொலையென மக்கள் கண்காணிப்பகத்தின் மனித உரிமை பிரிவு காமராஜ்ஜை போலிஸ் தற்காப்புக்காக சுடவில்லை, அவரை பிடித்து என்கௌண்டர் செய்துள்ளது என குற்றம்சாட்டியது. அதோடு, அவரது மகன் ராம்ராஜ் மூலமாக மறு உடற்கூறாய்வு செய்யவேண்டும்மென ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதை அறிந்த உயர்நீதிமன்றம் மறுஉடற்கூராய்வுக்கு உத்தரவு வழங்கியது.

 

அதன்அடிப்படையில் இன்று செப்டம்பர் 17ந்தேதி காளஸ்திரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூராய்வில், காமராஜ் உடலில் இருந்து பால்ரஸ் குண்டுகள் (சைக்கிள் வீலில் உள்ள பால்ரஸ்) 7 எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, காமராஜ் இடுப்பில் 6 இன்ச் அளவுக்கு குண்டு பாய்ந்த அடையாளம் உள்ளது. 6 இன்ச் என்பது மிக அருகில் இருந்து சுட்டால் தான் இப்படியாகும் என்கிறார்கள். போஸ்ட்மார்டம் முடிந்து உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் காமராஜ்ஜின் சொந்தவூரான கானாமலைக்கு கொண்டுவரப்படுகிறது, நாளை இறுதி காரியங்கள் நடைபெறும் என்கிறார்கள்.

 

ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் பாஸ்பரஸ் குண்டுகள் என்கிற கொத்து குண்டுகளை வீசி கொன்றதை பார்த்தோம். ஆந்திராவில் மரம் வெட்டச்சென்ற அப்பாவிகள் மீது பால்ரஸ் குண்டுகள் மூலம் கொல்லப்பட்டுள்ள தகவல் அதிர்வை ஏற்படுத்துகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாஜகவின் அதிகார வெறி இதன் மூலம் தெரிகிறது''-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
"BJP's hunger for power is evident through this" - Selvaperunthakai interview

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.

Next Story

அடுத்த 3 மணி நேரத்தில் மழை; 5 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
nn

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, தேனி, நெல்லை, திண்டுக்கல், குமரி ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.