Skip to main content

பானி பூரி விற்பனை செய்வது போல் கஞ்சா விற்பனை; 6 பேர் கைது

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

 Selling ganja in pani puri stalll; 6 people arrested

 

சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 6  இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து  2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சிதம்பரம் நகர காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிதம்பரம் நகரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் சின்னக்கடை தெரு அரசமரம் அருகே 3 வாலிபர்கள்  தள்ளு வண்டியில் பானிபூரி விற்பனை செய்வது போல் நின்று கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த  காவல்துறையினர் 3 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

 

அதில் சிதம்பரம் ஓமக்குளம் ஜமால் நகரைச் சேர்ந்த சுல்தான் (22), சீர்காழி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருணாமூர்த்தி (25),  சிதம்பரம் தொப்பையன் தெருவில் வசிக்கும் உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் மேகனா கிராமத்தைச் சேர்ந்த கல்லு மகன் அஜய் லாலு (25) (இவர் பானிபூரி விற்பனை செய்பவர்)  என்றும் இவர்கள் மூன்று பேரும் சிதம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய பானி பூரி தள்ளு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

 

இதுபோல அண்ணாமலை நகர்ப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக  அண்ணாமலை நகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாரியப்பா நகர் வாட்டர் டேங்க் அருகே மறைவான இடத்தில் 3 நபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த கௌதம் (22), சிதம்பரம் அம்மாபேட்டை அக்ரகார தெருவைச் சேர்ந்த மோதிலால் (22), அம்மாபேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த சைபால் என்கிற ரஞ்சித் (22) என்றும் இவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து  போலீஸார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 200  கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.