Skip to main content

தனது வீட்டில் தானே வெடிக்க வைத்த பெட்ரொல் குண்டு; இந்து முன்னணி நிர்வாகி கைது

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Self-detonated petrol in his house; Hindu Front Executive Arrested

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. 38 வயதான இவர் கொத்தனாராகப் பணிபுரிகிறார். இந்து முன்னணி அமைப்பின் மாநகரச் செயலாளராகவும் சக்கரபாணி உள்ளார். நேற்று காலை சக்கரபாணி வீட்டு வாசலில் மண்ணெண்னெய் வாசனையுடன் கூடிய கண்ணாடித் துகள்கள் சிதறிக் கிடந்துள்ளன. இதன் பின் தனது வீட்டு வாசலில் மர்ம நபர்கள் பெட்ரொல் குண்டு வீசியதாக கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

 

இது குறித்து சக்கரபாணி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல்துறையினர் விசாரித்தனர். காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா போன்ற உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். மோப்ப நாய் கொண்டு வந்து இது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது சாலை வரை ஓடிய நாய் மீண்டும் சக்கரபாணி வீட்டின் வாசல் அருகே நின்றது. இதனால் எழுந்த சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் சக்கரபாணியையும் மனைவி மாலதியையும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். 

 

இதில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ள முயற்சி செய்து தானே மண்ணெண்ணெய் வெடிகுண்டை தயாரித்து வீட்டு வாசலில் வெடிக்க வைத்து நாடகமாடியது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் சக்கரபாணியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.