Skip to main content

“பொன்னியின் செல்வன் எங்கள் இனத்தின் வரலாறு கிடையாது” - சீமான் 

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Seeman addressed press after may 1 celebration

 

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “அண்ணாமலை தன்னை தானே கலைஞர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். என சொல்லி அடையாளப்படுத்திக்கொள்கிறார். பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளில் தலைவர் என சொல்ல முடியாது. ஏறக்குறையை ஒருவரை இரண்டுவருடங்கள் வைப்பார்கள். பிறகு வேறு ஒரு நபரை தலைவராக்குவார்கள். பொன் ராதாகிருஷ்ணன் எங்கே? அவர் கட்சிக்காக உழைக்காததா. தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசு என காங்கிரஸுக்கு பல தலைவர்கள். இந்திய ஒன்றிய கட்சிகள் எந்த மாநிலத்திலும் நிரந்தரமாக ஒரு தலைவரை வைக்காது. அதுவெல்லாம் பெருந்தலைவரோடு முடிந்துவிட்டது. அதிகபட்சம் அண்ணாமலையை இந்த பாராளுமன்றத் தேர்தல் வரை இழுத்துவருவார்கள். அதன் பின் அதில் ஏதும் முன்னப்பின்ன ஆனதென்றால் அவரை மாற்றிவிட்டு புதியதாக ஒரு தலைவரை கொண்டுவருவார்கள்” என்றார். 

 

தொடர்ந்து செய்தியாளர்கள், ‘ஆளுநர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவரை ஆடையெல்லாம் கலைத்து சோதனை செய்தார்கள்’ என கேட்டனர். அதற்கு பதில் அளித்த சீமான், “இது மிகவும் கொடுமையானது. மானுட உரிமைக்கே எதிரானது. இன்னும் சிறை கூடங்களில் இவையெல்லாம் இருக்கிறது. நாங்கள் எல்லாம் சிறைக்கு செல்லும்போது, உடைகளை எல்லாம் கலைத்து நிர்வாணப்படுத்தி சோதித்து தான் அனுப்பினார்கள். நான் ‘அப்படியே உள்ளே போகிறேன்’ என்றேன். மக்களுக்காக போராடுபவர்களை ஏதோ சர்வதேச பயங்கரவாதி போல் நிர்வாணப்படுத்தி சோதிப்பார்கள்” என்றார். 

 

மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் தமிழர்களின் வரலாற்றை மிகவும் இழிவாக எடுத்திருக்கிறார்கள். ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொள்வதுபோல் காட்சி படுத்தியிருக்கிறார்கள் என விமர்சனங்கள் எழுகிறதே’ என்று கேள்வி எழுப்பினர். 

 

அதற்கு பதில அளித்த சீமான், “இதை இவ்வளவு ஆய்வு செய்யவேண்டியது இல்லை. அது ஒரு புதினம். பொன்னியின் செல்வன் எங்கள் இனத்தின் வரலாறு கிடையாது. கற்பனையில் அதனை எழுதும்போது அதனை திரிவுடன் தான் எழுதினார்” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.