Skip to main content

நேரு உள்விளையாட்டரங்கில் காவலர் தற்கொலை!

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

Security guard  in Nehru indoor stadium!

 

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சி மீண்டும் பிரமாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விளையாட்டரங்கில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிய உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியானது தற்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் நிறைவு விழா மீண்டும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா மேடைக்கு வருகின்ற வழியில் சென்னை ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் என்பவர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

இந்நிலையில் கழிவறைக்குச் சென்ற செந்தில்குமார் வெளியே வரவில்லை. திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்த மற்ற காவலர்கள் ஓடிச் சென்று கதவை உடைத்துப் பார்த்தனர். அப்பொழுது செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஆயுதப்படை காவலர் செந்தில் குமார் தன் கையில் வைத்திருந்த எஸ்எல்ஆர் ரக துப்பாக்கியை கொண்டு நெஞ்சில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.  உடனடியாக அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த சில தினங்களாக மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் செந்தில்குமார் மன உளைச்சலிலிருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக மேலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதேபோல் கடந்த 26 ஆம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் இருக்கும் செந்தில்குமார் விடுப்பு கிடைக்காத சூழலில் இருந்ததால். அது அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.