Skip to main content

இரண்டாவது தவணையாக ரூ. 2,000 அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார்!   

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

The second installment of Rs. 2,000- Minister KN Nehru has started!

 

இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டாயிரம் மற்றும் 14 வகையான இலவச மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (14.06.2021) துவக்கிவைத்தார்.

 

தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல் நேரத்தின்போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், திமுக வெற்றிபெற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு ரூபாய் 4,000 வழங்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வெற்றிபெற்று முதலமைச்சராக பதவியேற்ற பின் மு.க. ஸ்டாலின் முதல் தவணையாக கடந்த மே மாதம் 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து இரண்டாம் தவணையாக ரூபாய் 2,000 இம்மாதம் 15ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து .இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவராசு தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து அதனுடன் 14 வகையான இலவச மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் பொதுமக்களுக்கு வழங்கினார். 

 

The second installment of Rs. 2,000- Minister KN Nehru has started!

 

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், முசிறி காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், தமிழ்நாடு நுகர்பொருள்  வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசு, மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், ''இன்னும் இரண்டொரு நாளில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் தொடர்பாக பேசி உரிய அனுமதியுடன் வருவேன். பணி விரைவில் தொடங்கப்படும்'' என தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த நகர்ப்புறத்துறை அமைச்சர் கே.என். நேரு, ''பாண்டிச்சேரியில் ஆளுகிற பிஜேபி அங்கு நடத்துவது குறித்து பேசவில்லை. நீ செஞ்சா சரி, நான் செஞ்சா தப்பா? மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா. பிஜேபி ஆளும் மாநிலங்களில் திறந்திருக்கிறார்கள். எது மக்களுக்கு சரியாக இருக்குமோ அதனைக் கூட்டணிக் கட்சியுடன் இணைந்துதான் செய்ய முடியும். கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தலைவர் அழைத்துப் பேசினால் எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்'' என நகைச்சுவையாக கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.