Second day tour; chief minister study

சுற்றுப்பயணமாக கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். இன்று இரண்டாம் நாளாக கோவையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்

Advertisment

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை தமிழக முதல்வர் தற்பொழுது ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் செந்தில் பாலாஜி, சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். சுமார் 113 கோடி மதிப்பீட்டில் கோவை காந்திபுரம் பகுதியில் பூங்கா கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை ஆய்வு செய்த முதல்வர், பணிகளின் நிலவரம் குறித்துக் கேட்டிருந்தார்.

Advertisment