Skip to main content

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் வளர்க்கும் கடல் சாகச பயணம்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021
sdfg

 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகள் கொண்டு இயங்கும் புதுச்சேரி என்சிசி குழுமம் தனது என்சிசி மாணவர்களுக்காக சமுத்திர நோக்கயான் என்ற கடல் சாகச பயணத்தை ஏற்படு செய்துள்ளது. அந்த பயணத்தின் படி புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு கடலில் சென்று மீண்டும் புதுச்சேரிக்கு திரும்ப வேண்டும். இந்த சாகச பயணத்தில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 25 மாணவிகள் உட்பட 60 என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சாகசக்குழுவினர் கடந்த 4-ந்தேதி கடலூர் வெள்ளி கடற்கரையை சுத்தம் செய்தனர். தொடர்ந்து அக்குழுவினர் 5-ந்தேதி காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றனர். 

 

பின்னர்  6-ந் தேதி பிச்சாவரம், கடற்கரை வழியாக இக்குழுவினர் பாய்மர படகு மூலம் புறப்பட்டு பரங்கிப்பேட்டை, பூம்புகார் மார்க்கமாக காரைக்காலை சென்றடைவார்கள். மீண்டும் காரைக்காலில் இருந்து புறப்பட்டு கடலூர் மார்க்கமாக வரும் 15-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தடைவார்கள். இக்குழுவினர் மொத்தம் 302 கிமீ கடல் பயணம் செய்கின்றனர். கடல் பயணம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும், ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சியையும் தருகிறது. சாகசப்பயணத்தில் துடுப்பு படகு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கடற்படை கமாண்டர்கள் ரவிசங்கர், சுரேஷ்குமார் தலைமையில் பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.