Skip to main content

மாணவனின் டி.சி-ஐ வீசி எறிந்த பள்ளி; தலையிட்ட நக்கீரன்; அதிரடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்! 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

A school that threw away a student's TC; Minister Anbil Mahesh took immediate action!
தரையில் வீசப்பட்ட மாற்றுச் சான்றிதழ்

 

திருச்சி மாவட்டம், முசிறியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் சாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழு வயது மாணவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவன் தினமும் பள்ளி பேருந்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அந்த மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஆசிரியர்கள் அந்த மாணவனை வகுப்புக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமரவைத்துவிட்டு, அவரின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்துள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம், ‘மாணவன் இன்னும் பேருந்து கட்டணம் செலுத்தாததால் பேருந்தில் ஏற்றமுடியாது’ என்று கூறியுள்ளனர். அப்போது, மாணவனின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பள்ளி நிர்வாகம், பெற்றோரை ஒருமையில் பேசியுள்ளது. அதன் பிறகு மாணவனின் மாற்றுச் சான்றிதழை தூக்கி வீசியுள்ளது. 

 

A school that threw away a student's TC; Minister Anbil Mahesh took immediate action!
கோப்புப் படம்

 

இந்தச் சம்பவம் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் நக்கீரன் விசாரணை நடத்தியது. அதன் பிறகு முழு விவரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் எடுத்து சென்றோம். விவரத்தை முழுமையாக கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிச்சயம் முழு விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் உடனடியாக திருச்சி மாவட்டப் பள்ளிக் கல்வி அதிகாரிக்கு (சி.இ.ஓ) இந்த விவகாரத்தைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அமைச்சரின் உத்தரவை அடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு திருச்சி மாவட்ட சி.இ.ஓ சென்று விசாரணை மேற்கொண்டு பள்ளி நிர்வாகத்தை எச்சரித்தார். மேலும், அந்த மாணவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கவும், மாணவனை பள்ளி வாகனத்தில் வர அனுமதிக்கவும், பெற்றோருக்கு வேறு வழியில் எந்தப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார். 

 

A school that threw away a student's TC; Minister Anbil Mahesh took immediate action!
பள்ளி நிர்வாகம் அளித்த மன்னிப்பு கடிதம்

 

மாவட்ட சி.இ.ஓ.வின் உத்தரவை அடுத்து பள்ளி நிர்வாகம், ‘மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் கொடுத்தது தவறு என்று ஒப்புக்கொண்டது. பள்ளி நிர்வாகம் மாணவனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இப்பள்ளியில் தொடர்ந்து பயில முழுமையாக சம்மதிக்கிறது. வழக்கம்போல் சாலப்பட்டிக்கு பள்ளி வாகனம் அனுப்பப்படும். 


மாணவனின் பெற்றோர் இனி எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்போம் என உறுதியளித்தனர்’ என்று தங்களது மன்னிப்பு அறிக்கையில் தெரிவித்தனர்.  

 

இதுகுறித்து மாணவனின் தாய் கலைச்செல்வி கூறுகையில் பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து வருகின்ற திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் மாணவன் பள்ளிக்கு வரலாம் என்று உறுதியளித்துள்ளது என்று தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.