Skip to main content

குழந்தை கொலையும், கணவன் தற்கொலையும்..? -விசாரணை வளையத்தில் மனைவி!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

ஊரடங்கினால் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 


சாத்தூரில் நடந்திருப்பதும் குடும்ப வன்முறை சம்பவம்தான். மாரிக்கண்ணன் என்பவர் தனது ஒரு வயது ஆண் குழந்தை மவுனி கணேசனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக, சாத்தூர் வட்டம் – இருக்கன்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. 

 

Sattur incident - highcourt order- TNGovt



என்ன விவகாரமாம்??

ஏதோ ஒரு காரணத்தால், தனது அத்தை மகள் சங்கரேஸ்வரியை திருமணம் செய்வதற்கு ஆரம்பத்திலேயே மறுப்பு தெரிவித்திருக்கிறார், மாரிக்கண்ணன். ஆனாலும், குடும்பத்தினர் வற்புறுத்தியதால் திருமணம் நடந்திருக்கிறது. இரண்டாண்டு திருமண வாழ்க்கையில் மவுனி கணேசன் பிறந்திருக்கிறான். ஆனாலும், மாரிக்கண்ணனுக்கும், சங்கரேஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.  கோபித்துக்கொண்டு, தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டியிலுள்ள தாய் வீட்டிற்குச் செல்வதை சங்கரேஸ்வரி வழக்கமாக கொண்டிருந்தாள்.

கடந்த 18-ஆம் தேதி தாய் வீட்டிலிருந்து சாத்தூர் வட்டம் – போத்திரெட்டிபட்டியிலுள்ள கணவன் மாரிக்கண்ணன் வீட்டுக்கு சங்கரேஸ்வரி வந்திருக்கிறார். அன்றும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே சண்டை நடந்திருக்கிறது. அதனால் வெறுத்துப்போய்,   தன்னுடைய குழந்தை மவுனி கணேசனை டூ வீலரில் வெளியே அழைத்துச் சென்றார் மாரிக்கண்ணன். அப்போது ஏதோ நடந்திருக்கிறது குழந்தை இறந்த நிலையில், ஊர் திரும்பிய மாரிக்கண்ணன், டூ வீலரிலிருந்து சரிந்து விழுந்திருக்கிறான். குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு,  தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருக்கிறார் என்று தகவல் வேகமாக பரவ, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாரிக்கண்ணனை கொண்டு சென்றார்கள்.  சிகிச்சை பலனின்றி மாரிக்கண்ணனும் இறந்து போனார்.  
 

nakkheeran app


மாரிக்கண்ணன் உறவினர் தரப்பில்,  டிரைவர் வேலை என்பதால் வீட்டிலேயே மாரிக்கண்ணன் இருக்க மாட்டார். அந்த நேரத்தில் மனைவி எப்படி நடந்துகொண்டார் என்பதை தெரிந்துகொண்டார். இந்த விவகாரத்தால்  இவர்கள் அடிக்கடி சண்டை போட்டனர்.  இந்தக் குடும்பத் தகராறு,  குழந்தையின் பிறப்பு குறித்தும் சந்தேகம் கொள்ள வைத்தது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணித்தான், சோற்றில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது.  அந்த விஷம்தான், மாரிக்கண்ணன், மவுனி கணேசன் ஆகிய இருவரையும் சாகடித்துவிட்டது என்று சந்தேகம் கிளப்புகின்றனர். 

காவல்துறை வட்டாரத்திலோ,   “அப்பா இல்லாத மாரிக்கண்ணன்,  தன் தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் மீது அதிக பாசம் காட்டி வந்தார். இது சங்கரேஸ்வரிக்கு அறவே பிடிக்கவில்லை. தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒருகட்டத்தில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாரிக்கண்ணன் மீது புகார் அளித்தார். எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாமல், நல்ல முறையில் வாழ்ந்த மாரிக்கண்ணன், காவல் நிலைய விசாரணைக்கு ஆளானதை எண்ணி வேதனை அடைந்தார். தன் பெயரிலுள்ள சொத்துகள்,  தனது இறப்புக்கு பிறகு மனைவியின் கைக்கு போய்விடக்கூடாது என்ற நோக்கத்தோடுதான், விஷம் கொடுத்து குழந்தையை கொலை செய்திருக்கிறார். மனைவி மீது மாரிக்கண்ணனுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மாரிக்கண்ணன் மற்றும் சங்கரேஸ்வரி ஆகிய இருவரது செல்போன்களும் கைப்பற்றப்பட்டு, ‘அழைப்பு விபரங்கள்’ கேட்கப்பட்டுள்ளன. அது கிடைத்ததும்,  யார், யாரிடம் பேசினார்கள் என்பது தெரியவரும். சங்கரேஸ்வரி தொடர்ந்து காவல்துறையின் விசாரணை வளையத்திலேயே இருக்கிறார்.” என்றனர். 

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும்,  இரு மனங்களும் பொருந்திப்போனால்,  கணவனும் மனைவியும் கருத்தொருமித்தவர்களாக வாழ முடியும் என்றும்,  தமிழர் பண்பாடு ஒழுங்கு முறையான குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் உகந்தது என்றும் சொல்லப்பட்டு வரும் நிலையில், இதற்கு முற்றிலும் மாறாக மாரிக்கண்ணன் – சங்கரேஸ்வரி வாழ்க்கை அமைந்து, இரு உயிர்களைப் பறித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.