Skip to main content

காவி கலருக்கு மாற்றப்பட்ட புள்ளிமான்...இன்னும் காவி எங்கெல்லாம் ஊடுறுவப் போகிறதோ..?

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனச்சரகத்தில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் அந்த மான்கள், உணவு, குடிநீர் தேடி, வனப்பகுதியை ஒட்டியுள்ள சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். 

 

 Sathyamangalam-spotted deer

 


அவ்வாறு சாலையை கடக்கும் மான்கள், வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் தொடர்ந்து  தொடர்கதையாக உள்ளது.  இதை தடுக்க, வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில்  மான்கள் சாலையை கடக்கும் பகுதியில் பவானிசாகர்,புஞ்சைபுளியம்பட்டி சாலையில் நால்ரோடு அண்ணாநகர் அருகே மான் உருவத்தில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர் வனத்துறையினர்.

மான்கள் நடமாடும் அந்த  பகுதியை வனச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில், இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் மான்கள் நடமாட்டமுள்ள பகுதிகளை எளிதாக அறிந்து வாகனத்தை மிதவேகத்தில் இயக்கினால் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க முடியும்  என வனத்துறையினர் செய்துள்ளனர்.

இதுவெல்லாம் சரி ஆனால் புள்ளி மான் என்ன கலரில் இருக்கும்? அதன் இயற்கையான நிறம் க்கிரே கலரில் வெள்ளை நிறத்தில் புள்ளி, கோடுகள் இருக்கும். ஆனால் வனத்துறையினர் செய்து வைத்துள்ள பலகையில் புள்ளி மான் காவி நிறத்தில் உள்ளது. இதுபற்றி வனத்துறை அதிகாரி கூறுகையில், "நம்ம தமிழ்நாடு அரசுக்கு பிடித்த கலர் பச்சை அதை அடுத்து காவி கலர் பச்சை கலரில் மான் உருவ போர்டு வைத்தால் காட்டுப் பகுதியில் தெரியாது ஆக அரசுக்கு பிடித்த அடுத்த கலர் காவி அகவே தான் காவி கலரில் மான் உருவ போர்டு வைத்தோம்" என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.