Skip to main content

மணல்கொள்ளையை காட்டிக்கொடுததற்காக ஒருவர் அடித்து கொலை!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

திமுகவை சேர்ந்த ஒருவர் கொள்ளிடத்தில் மணல்திருடுவது குறித்து போலீசுக்குத் தகவல் சொன்னதால் ஆத்திரம் அடைத்த 3 பேர் பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள புலவனுர் சாத்தங்குடியை சேர்ந்தவர் நடேசன்பிள்ளை மகன் மருதவாணன்(50). இவர்குறிச்சி ஊராட்சி திமுக செயலாளராகவும் இருந்துவந்தார். அதோடு டைலர் கடை வைத்து நடத்திவந்தார்.

 

One of the victims was beaten and killed

 

இந்தநிலையில் 29 ம் தேதி நள்ளிரவு டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக மணல்மேடு காவல்நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து காவல்நிலையத்தை சேர்ந்த விவேக்ரவிராஜ் மற்றும் லோகநாதன் ஆகிய உதவி ஆய்வாளர்கள் சென்று கடுவங்குடி என்ற இடத்தில் சென்ற டிராக்டரை மடக்கிபிடித்துள்ளனர்.  போலிஸை கண்ட  டிரைவர் இறங்கி ஓடி தப்பிவிட்டார். 

 

One of the victims was beaten and killed

 

கொள்ளிடத்தில் திருடப்பட்ட மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.  அந்த டிராக்டரின் உரிமையாளர் கனகராஜ் மற்றும் சித்தமல்லியை சேர்ந்த சேட்டு என்கிற ஜெயக்குமார், ரஞ்சித் ஆகியோர் டிராக்டரை போலீசார் பிடித்ததற்கு திமுக ஊராட்சி செயலாளரான மருதவாணன்தான் காரணம் என எண்ணி,  மருதவானனைத்தேடி சென்றுள்ளனர்.  புலவனூர் தபால்நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்த மருதவாணனை 3 பேரும் சேர்ந்து இரும்பு பைப்பால் கொடூரமாக அடித்துள்ளனர், மருதவாணன் இறந்துவிட்டதை கண்டவர்கள்  தப்பியோடிவிட்டனர், இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து 3 நபர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.  

 

sand

 

"கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவ்வப்பொழுது போலீசாரும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடித்து வழக்குப் பதிவுசெய்தும் வருகின்றனர். ஆனால் மணல் திருட்டு குறித்து காவல்துறைக்குச் சொல்லியதால் கொலை செய்திருப்பது  இதுதான் முதல்முறையாகும்." என அச்சப்படுகிறார்கள் சமுக ஆர்வளர்கள்.

 

கொலையான மருதவாணனுக்கு உமா(45) என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் ஒரு பெண்பிள்ளையும் உள்ளனர். தந்தை இறந்த செய்தி கேள்விப்பட்ட மகள் துர்க்கா மயிலாடுறை அரசு மருத்துவமனைக்குச்சென்றார். அந்த நேரத்தில் தனது தந்தையின் சடலம் மருத்துவமனைக்கு கொண்டுவந்ததைக்கண்டு கதறி அழுது  புறண்டுவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.