Skip to main content

சவுடு மணல் எடுப்பதாக ஊற்றுமண் கொள்ளை... அரசு கஜானாவிற்கு நட்டத்தை ஏற்படுத்தும் அதிகாரிகள்!  

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

Sand robbery ... Officials causing damage to the government treasury!

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை, வேளங்கிபட்டு, அத்தியாநல்லூர், மணிகொல்லை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இயற்கையாகவே சவுடு மணல் விளை நிலங்களில் சமதளத்தில் மேடுகளாக உள்ளது.  இந்த பகுதிகளில் விவசாயிகள் மணிலா, சவுக்கை, பூச்செடிகள், முருங்கை, முந்திரி, கம்பு, எள், கத்தரி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர் செய்து வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆற்று மண் விலை பல்லாயிரக்கணக்கில் உயர்ந்துள்ளதால் அந்த பகுதியில் உள்ள சிலர் விவசாய நிலங்களில்  ஆற்று மணலைவிட நைசாக இருக்கும் சவுடு மணலை எடுக்க புவியியல் துறையில் அனுமதி பெற்று சில மேடான விளைநிலங்களில் சவுடு மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இது கட்டிட வேலையில் செயற்கை மண்ணுடன் கலந்து கட்டிடம் கட்டவும், வீடு கட்டப்பட்டு தரைதளத்தில் இந்த மண்ணை கொண்டு நிரப்பினால் குளிர்ச்சியாக தரை இருக்கும் அதனால். சவுடு மணல் தற்போது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஒரு லாரி மண் 50 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

அதே நேரத்தில் நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திலும் ஒரு அனுமதியை மட்டும் வைத்துக் கொண்டு அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி கள்ளத்தனமாக மற்ற இடங்களையும் எடுத்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை பாழ்படுத்தி கடல் நீர் உட்பகுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

 

சட்டத்திற்கு புறம்பாக இரவு பகல் பாராமல் 100 முதல் 200 லாரிகள் வரை தொடர்ந்து மணல் அள்ளி வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகள், விவசாய போர்வெல்கள் பழுதாகி உள்ளதாக அப்பகுதி உள்ள விவசாயிகள் வேதனை தெரிவித்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

Sand robbery ... Officials causing damage to the government treasury!

 

இதுகுறித்து மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், ''தற்போது கொத்தட்டை மற்றும் அத்தியாயநல்லூர் கிராமத்தில் மணல்குவாரி இயங்கி வருகிறது. அரசு சவுடு மணலை 6 அடிக்கு கீழே எடுக்கக் கூடாது என கூறியுள்ளது. இந்த ஆறு அடிக்குள் எடுத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இவர்கள் 6 அடிக்கு அனுமதி வாங்கிக்கொண்டு 30 அடி வரை ஆழத்தில் மண்ணை எடுக்கிறார்கள். இந்த பகுதியில் 10 அடி வரைதான் சவுண்டு மணல் இருக்கும்.  10 அடிக்கு கீழே சேறும் சகதியுமாக ஊற்றுமண் இருக்கும் இதில் நீர் வளம் சேமிக்கப்பட்டு இருக்கும். இது ஆற்று மணல் போல உள்ளதால் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பதத்தில் இருக்கும்.  இந்த சேறு சகதியுமான மண்ணை பொக்லின் மூலம் 30 அடி ஆழ தோண்டி எடுத்து மேலே போட்டு மற்ற ஒரு பொக்ளின் மூலம் மண் உலர்ந்த பிறகு லாரியில் ஏற்றி ஆற்று மணல் விலைக்கு லட்சக்கணக்கில் பெருநகரங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார்கள்.  இதனால் அந்த ஊற்று மண்ணை வெளியே எடுத்து விட்டால் கடல் உப்பு நீர் நிலத்தடிக்குள் புகுந்து நிலங்கள் அனைத்தும் உப்பு நீராக மாறிடும். 15  அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது 300 அடிக்கு போர் போட்டும் போர் அடிக்கடி தண்ணீர் இல்லாததால் பழுதாகிறது. எனவே இந்த பகுதியில் சவுடு மணல் குவாரிக்கு அனுமதியே கொடுக்கக்கூடாது. காவல்துறை, வருவாய் துறையினருக்கு செய்ய வேண்டிய கடமையை தினத்தண்டல் போல் செய்துவிட்டு திருட்டு தனமாக மணலை அள்ளி அரசுக்கு பல கோடி ரூபாயை நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள்'' என்கிறார்.  

 

வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறுகையில்,''கொத்தட்டை ஊராட்சி முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்  அடியாட்களை கையில் வைத்துக் கொண்டு மாலை நேரங்களில் இளைஞர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து மிரட்டி 24 மணி நேரமும் இங்குள்ள வளங்களை அழித்து வருகிறார். கேட்டால் அமைச்சர் உள்ளிட்ட இங்குள்ள அனைத்து கட்சி காரனுக்கும், போலீசுக்கும், மைன்ஸ், வருவாய் என அனைவருக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்துதான் தொழில் செய்து வருகிறோம். உனக்கு என்ன தேவை என்று கூறு அதை விட்டுவிட்டு அநாவசியமாக தலையிட வேண்டாம் கேட்பவர்களை மிரட்டி வருகிறார்.

 

Sand robbery ... Officials causing damage to the government treasury!

 

சிலர் இதனையும் மீறி கேட்டால் சமாதானம் செய்து சொற்ப பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள். மணல் எடுத்த இடத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இது தெரியாமல் அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் சவுடு மணல் என்ற போர்வையில் ஊற்று மண் எடுக்கிறவனுக்கு துணை போய் வரும் சந்ததியை அழிக்கிறார்கள். இதனைக் கண்டித்து உண்ணாவிரத  போராட்டம் நடத்த திட்டமிட்டால் காவல்துறை மிரட்டுகிறது. சரியான நடவடிக்கை இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்'' என்றார்.

 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் கூறுகையில், ''இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரவலாக பேசி வருகிறார்கள். நடப்பது உண்மை தான் சம்பந்தப்பட்ட விவசாயிகளோ, கிராம மக்கள் கடிதமாகக் கொடுத்தால் மார்க்சிஸ்ட் கட்சி இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு துணையாக இருக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.