Skip to main content

சவுடு மணல் எடுப்பதாக ஊற்றுமண் கொள்ளை... அரசு கஜானாவிற்கு நட்டத்தை ஏற்படுத்தும் அதிகாரிகள்!  

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

Sand robbery ... Officials causing damage to the government treasury!

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை, வேளங்கிபட்டு, அத்தியாநல்லூர், மணிகொல்லை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இயற்கையாகவே சவுடு மணல் விளை நிலங்களில் சமதளத்தில் மேடுகளாக உள்ளது.  இந்த பகுதிகளில் விவசாயிகள் மணிலா, சவுக்கை, பூச்செடிகள், முருங்கை, முந்திரி, கம்பு, எள், கத்தரி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர் செய்து வாழ்வாதாரத்தை காத்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆற்று மண் விலை பல்லாயிரக்கணக்கில் உயர்ந்துள்ளதால் அந்த பகுதியில் உள்ள சிலர் விவசாய நிலங்களில்  ஆற்று மணலைவிட நைசாக இருக்கும் சவுடு மணலை எடுக்க புவியியல் துறையில் அனுமதி பெற்று சில மேடான விளைநிலங்களில் சவுடு மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இது கட்டிட வேலையில் செயற்கை மண்ணுடன் கலந்து கட்டிடம் கட்டவும், வீடு கட்டப்பட்டு தரைதளத்தில் இந்த மண்ணை கொண்டு நிரப்பினால் குளிர்ச்சியாக தரை இருக்கும் அதனால். சவுடு மணல் தற்போது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஒரு லாரி மண் 50 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

அதே நேரத்தில் நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திலும் ஒரு அனுமதியை மட்டும் வைத்துக் கொண்டு அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி கள்ளத்தனமாக மற்ற இடங்களையும் எடுத்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை பாழ்படுத்தி கடல் நீர் உட்பகுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

 

சட்டத்திற்கு புறம்பாக இரவு பகல் பாராமல் 100 முதல் 200 லாரிகள் வரை தொடர்ந்து மணல் அள்ளி வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகள், விவசாய போர்வெல்கள் பழுதாகி உள்ளதாக அப்பகுதி உள்ள விவசாயிகள் வேதனை தெரிவித்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

Sand robbery ... Officials causing damage to the government treasury!

 

இதுகுறித்து மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் கூறுகையில், ''தற்போது கொத்தட்டை மற்றும் அத்தியாயநல்லூர் கிராமத்தில் மணல்குவாரி இயங்கி வருகிறது. அரசு சவுடு மணலை 6 அடிக்கு கீழே எடுக்கக் கூடாது என கூறியுள்ளது. இந்த ஆறு அடிக்குள் எடுத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இவர்கள் 6 அடிக்கு அனுமதி வாங்கிக்கொண்டு 30 அடி வரை ஆழத்தில் மண்ணை எடுக்கிறார்கள். இந்த பகுதியில் 10 அடி வரைதான் சவுண்டு மணல் இருக்கும்.  10 அடிக்கு கீழே சேறும் சகதியுமாக ஊற்றுமண் இருக்கும் இதில் நீர் வளம் சேமிக்கப்பட்டு இருக்கும். இது ஆற்று மணல் போல உள்ளதால் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பதத்தில் இருக்கும்.  இந்த சேறு சகதியுமான மண்ணை பொக்லின் மூலம் 30 அடி ஆழ தோண்டி எடுத்து மேலே போட்டு மற்ற ஒரு பொக்ளின் மூலம் மண் உலர்ந்த பிறகு லாரியில் ஏற்றி ஆற்று மணல் விலைக்கு லட்சக்கணக்கில் பெருநகரங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார்கள்.  இதனால் அந்த ஊற்று மண்ணை வெளியே எடுத்து விட்டால் கடல் உப்பு நீர் நிலத்தடிக்குள் புகுந்து நிலங்கள் அனைத்தும் உப்பு நீராக மாறிடும். 15  அடியில் கிடைத்த தண்ணீர் தற்போது 300 அடிக்கு போர் போட்டும் போர் அடிக்கடி தண்ணீர் இல்லாததால் பழுதாகிறது. எனவே இந்த பகுதியில் சவுடு மணல் குவாரிக்கு அனுமதியே கொடுக்கக்கூடாது. காவல்துறை, வருவாய் துறையினருக்கு செய்ய வேண்டிய கடமையை தினத்தண்டல் போல் செய்துவிட்டு திருட்டு தனமாக மணலை அள்ளி அரசுக்கு பல கோடி ரூபாயை நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள்'' என்கிறார்.  

 

வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறுகையில்,''கொத்தட்டை ஊராட்சி முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்  அடியாட்களை கையில் வைத்துக் கொண்டு மாலை நேரங்களில் இளைஞர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து மிரட்டி 24 மணி நேரமும் இங்குள்ள வளங்களை அழித்து வருகிறார். கேட்டால் அமைச்சர் உள்ளிட்ட இங்குள்ள அனைத்து கட்சி காரனுக்கும், போலீசுக்கும், மைன்ஸ், வருவாய் என அனைவருக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்துதான் தொழில் செய்து வருகிறோம். உனக்கு என்ன தேவை என்று கூறு அதை விட்டுவிட்டு அநாவசியமாக தலையிட வேண்டாம் கேட்பவர்களை மிரட்டி வருகிறார்.

 

Sand robbery ... Officials causing damage to the government treasury!

 

சிலர் இதனையும் மீறி கேட்டால் சமாதானம் செய்து சொற்ப பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள். மணல் எடுத்த இடத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இது தெரியாமல் அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் சவுடு மணல் என்ற போர்வையில் ஊற்று மண் எடுக்கிறவனுக்கு துணை போய் வரும் சந்ததியை அழிக்கிறார்கள். இதனைக் கண்டித்து உண்ணாவிரத  போராட்டம் நடத்த திட்டமிட்டால் காவல்துறை மிரட்டுகிறது. சரியான நடவடிக்கை இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்'' என்றார்.

 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் கூறுகையில், ''இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரவலாக பேசி வருகிறார்கள். நடப்பது உண்மை தான் சம்பந்தப்பட்ட விவசாயிகளோ, கிராம மக்கள் கடிதமாகக் கொடுத்தால் மார்க்சிஸ்ட் கட்சி இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு துணையாக இருக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாலியல் வன்கொடுமை‌; தீட்சிதர் தலைமறைவு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Woman molested in Chidambaram Nataraja Temple; Dikshitra disappeared

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை‌க்கு ஆளாக்கப்பட்ட நிலையில் தலைமறைவான தீட்சிதரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயிலில் இயங்கி வரும் அன்னதான கூடத்தில் சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா(46) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் பணி செய்து வருகிறார். தெற்கு சன்னதியில் வசிக்கும், நடராஜர் கோவிலில் தீட்சிதராகப் பணியாற்றும் மணிகண்டன் என்கிற கிருஷ்ணசாமி தீட்சிதர். கவிதா தெற்கு சன்னதியில் வேலைக்கு தனியாக வரும்போது சேலையை இழுத்து அவரது மேல் சட்டை மீது கை வைத்து பாலியல் சீண்டலில் கிருஷ்ணசாமி தீட்சிதர்  ஈடுபட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் சிதம்பரம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிருஷ்ணசாமி தீட்சிதரை தேடி வருகின்றனர். நடராஜர் கோவில் தீட்சிதர் வேலைக்குச் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.