Skip to main content

சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்: 'ஆலையை பார்வையிட தனியாரை அனுமதிக்க மாட்டோம்'!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

தமிழகத்தில் உள்ள முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பதற்கான உலகளவிலான ஒப்பந்தத்தை செயில் நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. ஒப்பந்தம் எடுப்பதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வரராததால், இதற்கான அவகாசத்தை மேலும் இருபது நாள்களுக்கு நீட்டித்துள்ளது செயில்.

 

SALEM STEEL PLANT SAIL EMPLOYEES STRIKE

 


இரும்பாலை தனியார்மயமாக்கலைக் கண்டித்தும், செயில் நிர்வாகத்திற்கு எதிராகவும் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சேலம் இரும்பாலையை வாங்க விரும்பும் நிறுவனங்கள் ஆலை செயல்பாடுகளை நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒப்பந்தம் பெற விண்ணப்பிக்கும் தனியார் நிறுவனத்தினர் எப்போது வேண்டுமானாலும் ஆலைக்குள் வரலாம் என்பதால், அவர்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், இரும்பாலை தொழிலாளர்கள் திங்கள்கிழமை (ஆக. 5) காலை முதல் ஆலையின் நுழைவு வாயில் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தொழிலாளர்கள் சுழற்சி முறையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

SALEM STEEL PLANT SAIL EMPLOYEES STRIKE

 


இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''தொழிலாளர்களின் பல்வேறுகட்ட போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் மத்திய பாஜக அரசு இந்த ஆலையை தனியார்மயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஒப்பந்தம் எடுக்க விரும்பும் நிறுவனத்தினர் இந்த ஆலையை பார்வையிட வருவதாக தகவல் கிடைத்தது. விலைக்கு வாங்கும் நோக்கத்தில் யார் வந்தாலும் ஆலைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துவோம். அதற்காகவே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.