Skip to main content

கடத்தல், வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிக்கு குண்டர் சட்டத்தில் காப்பு!

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

salem rowdy goondas act police arrested

 

சேலத்தில், ரியல் எஸ்டேட் முகவரை கடத்தி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

சேலம் மாவட்டம், வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன். ரியல் எஸ்டேட் முகவர். இவரை கடந்த மார்ச் 6- ஆம் தேதி, மர்ம நபர்கள் சிலர் கடத்திச்சென்று கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 41 ஆயிரம் ரூபாய், ஒரு ஜோடி தங்கத்தோடு, கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். 

 

இச்சம்பவம் குறித்து கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சேலத்தை அடுத்த மன்னார்பாளையம் பாலப்பட்டியைச் சேர்ந்த முருகன் மகன் அஜித் என்கிற யமஹா அஜித்குமார் (வயது 25), அவருடைய கூட்டாளிகள் சித்தேஸ்வரன், அப்பு என்கிற அரவிந்த், ஆட்டோ பாண்டி ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

இவர்களில், ரவுடி அஜித் என்கிற யமஹா அஜித்குமார், மேற்படி கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அடிதடியில் ஈடுபட்டதாக அப்போது சூரமங்கலம் காவல்நிலையத்திலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. 

 

இந்த நிலையில் கடந்த மார்ச் 7- ஆம் தேதி, சென்னகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தனபால் என்பவர் ரயில்வே கூட்ஸ் ஷெட் அருகே நடந்து சென்றபோது அவரிடம் கத்தி முனையில் பணம், செல்போன், கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாகவும் அஜித்குமார் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

 

ரவுடி அஜீத்குமார், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில், அவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மே 17) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

கைது ஆணை, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜித்குமாரிடம் நேரில் சார்வு செய்யப்பட்டது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.