Skip to main content

சிறுமி ஆணவக் கொலையா? சேலம் அருகே பயங்கரம்! 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Salem girl child passed away police investigation

 

சேலம் அருகே, 17 வயது சிறுமியை பெற்றோரே ஆணவக்கொலை செய்து விட்டதாகக் கூறி, அவளுடைய காதலனின் உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி சேமலா (36). இவர்களுடைய 17 வயது மகள், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் (27) என்பவரும் சிறுமியும் காதலித்து வந்தனர். செப். 19ம் தேதி, சிறுமியிடம் திருமண ஆசை காட்டி அவரை சேலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சம்பத் அழைத்துச் சென்றுள்ளார். 

 

ஆனால், சம்பத் தன் மகளை மயக்கிக் கடத்திச்சென்று ஆபாசமாக நடந்து கொண்டதாக சிறுமியின் பெற்றோர், காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை மீட்டனர். சம்பத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

இது ஒருபுறம் இருக்க, சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சம்பத்தை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார். இந்நிலையில், சிறுமியின் தாயார் சேமலா, செப். 25ம் தேதி இரவு, அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

அன்று இரவு சேமலாவின் கணவர் அறிவழகனும் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார். திங்கள்கிழமை (செப். 26) காலை வீட்டிற்கு வந்த அறிவழகன் வீட்டில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறி சடலத்தைப் பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். 

 

அப்போது, சிறுமியின் காதலனான சம்பத்தின் உறவினர்கள், அந்த பகுதி பொதுமக்கள் ஆகியோர் திடீரென்று சடலத்தை ஏற்றிச்செல்ல வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமிக்கு விருப்பம் இல்லாத இடத்தில் அவளை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்கு அவள் சம்மதிக்காததால் மகள் என்றும் பாராமல் பெற்றோரே ஆணவக் கொலை செய்துவிட்டு, தாயாரும் தற்கொலை நாடகம் ஆடுகிறார் என்று குற்றம் சாட்டினர். 

 

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் புறநகர் டி.எஸ்.பி ஸ்வேதா தலைமையில் காவல்துறையினர் நிகழ்விடம் சென்று, பொதுமக்களை சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடற்கூராய்வு செய்த பிறகு அவள் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டரா? என்பது தெரியவரும். அதன்படி தீவிர விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.