Skip to main content

சேலம் தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல்; ஜூன் 15- ல் வேட்புமனு தாக்கல்! டி.எம்.செல்வகணபதி அறிக்கை!!

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

Salem DMK Election of union executives; Nomination on June 15! TM Treasurer Report !!

 

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவோர், வரும் புதன்கிழமை (ஜூன் 15) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், " தி.மு.க.வின் 15- வது பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. இதையடுத்து, சேலம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, இடைப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் மேற்கு ஆகிய ஒன்றியங்களில் கழக நிர்வாகிகள் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. 

 

ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வரும் புதன்கிழமை (ஜூன் 15) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள ஸ்ரீநடராஜன் மஹால் மண்டபத்தில் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்புகளுக்கான வேட்புமனுக்களை பெற்று, முறைப்படி பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்துடன் தலைமைக்கழக பிரதிநிதி வழக்கறிஞர் அருள்தாசனிடம் ஒப்படைக்க வேண்டும். 

 

ஒன்றிய கழகத்திற்கான அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச்செயலாளர் 3 பேர், மாவட்ட பிரதிநிதிகளாக 3 பேர், இவர்களைத் தவிர 11 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். 

 

தாங்கள் உறுப்பினராக உள்ள ஒன்றியங்களில் மேற்கண்ட பொறுப்புகளுக்கு போட்டியிடலாம். வேட்பாளர்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக்கழகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைச்செயலாளராகவோ, ஒன்றிய பிரதிநிதியாகவோ இருத்தல் வேண்டும். 

 

செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடுவோர் அந்தந்த ஒன்றியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருத்தல் வேண்டும்." இவ்வாறு டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது