Skip to main content

சேலம் மாவட்டத்தில் இயல்பை விட கூடுதல் மழை பொழிவு; 1240 மி.மீ. கொட்டி தீர்த்துடுச்சு! 

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

Salem district receives more rainfall than usual;

 

சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நவ. 25- ஆம் தேதி வரையிலும் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. இதுவரை 1240 மி.மீ. மழை பதிவாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நவ. 26- ஆம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா கூட்டத்தில் பேசியதாவது, "விவசாயிகள் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் வேளாண் பொருள்களின் உற்பத்தியை உயர்த்திட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுடன், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் வகையில் வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

 

சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு பருவ காலத்தில் சராசரியாக 997.90 மி.மீ. மழை பெய்யும். நவம்பர் மாதத்தில் இயல்பான மழை அளவு 942.10 மி.மீ. ஆகும். நடப்பு மாதத்தில் கடந்த நவம்பர் 25- ஆம் தேதி முடிய 1240.20 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது இந்த ஆண்டு இயல்பான அளவைக் காட்டிலும் அதிகளவு மழை பெய்துள்ளது. 

 

சேலம் மாவட்டத்தில் அக்டோபர் 2021 மாதம் வரை 174583.8 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நெல் தானியம் 124.867 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 38.807 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 142.766 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்து 177.672 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. யூரியா, டிஏபி, பொட்டாஷ், கலப்பு உரங்களும் தேவையான அளவு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. 

 

தோட்டக்கலைத்துறை சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள், மலர் ரகங்கள் 156500 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் இதுவரை 65458 ஹெக்டேர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் உற்பத்தியில் 49.13 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 10.864 மெட்ரிக் டன் பயிர் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 

 

எதிர்பாராத இடர்பாடுகளால் ஏற்படும்பட்சத்தில் நிதியுதவி வழங்கும் வகையில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 

தற்போது உளுந்து, தட்டைப்பயறு பயிர்களுக்கு ஏக்கருக்கு 199 ரூபாய் செலுத்தி வரும் நவம்பர் 30- ஆம் தேதி வரையிலும், சோளத்திற்கு 125 ரூபாய் செலுத்தி வரும் டிசம்பர் 15- ஆம் தேதி வரையிலும், ராகி பயிருக்கு 140 ரூபாய், நிலக்கடலை பயிருக்கு 300 ரூபாயும் செலுத்தி டிசம்பர் 31- ஆம் தேதி வரையிலும் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம். 

 

உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்." இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.