Skip to main content

பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

salem district incident police arrested five persons

 

சேலத்தில், பெண்களைப் பலவந்தப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பெண் உள்பட ஐந்து பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

 

சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி இரும்புதலை ஏட்டுக்காட்டைச் சேர்ந்தவர் செல்வா என்கிற செந்தில்குமார். சேலம் 5 சாலை அருகே, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்துவந்துள்ளார்.

 

அந்த வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி சேலம் மாநகரக் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களை மீட்டனர். செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.

 

பூமிநாயக்கன்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திகாதேவி என்பவர், ரெட்டியூர் திருமால் நகரில் ஒரு வீட்டில் மசாஜ் மையம் என்ற பெயரில் விபச்சாரத் தொழில் செய்துவந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி கார்த்திகா தேவியை கைது செய்த காவல்துறையினர், அவருடைய மசாஜ் மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண் ஒருவரையும் மீட்டனர்.

 

அதேபோல அழகாபுரம் புவனேஸ்வரி நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரத் தொழில் செய்துவந்த ராஜ்குமார் என்பவரையும் கடந்த மாதம் 19ஆம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து பாலியல் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட நான்கு பெண்களையும் காவல்துறையினர் மீட்டு, அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

 

மேலும், அம்மாபேட்டையைச் சேர்ந்த ஞானவேல், கன்னங்குறிச்சி எல்பி செட்டி தெருவைச் சேர்ந்த சைமன் ஆகியோரும் விபச்சாரத் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்ட கார்த்திகாதேவி, ராஜ்குமார், ஞானவேல், சைமன், செல்வா என்கிற செந்தில்குமார் ஆகியோர் அப்பாவி பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு வற்புறுத்தியும், தனக்கு உடன்படாத பெண்களைத் துன்புறுத்தியும் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. கைதான அனைவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரம் பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகரக் காவல்துறை ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில், ஐந்து பேரும் விபச்சாரத் தொழில் குற்றவாளி என்ற பிரிவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

 

இவர்களில் கார்த்திகாதேவி, கோவை பெண்களுக்கான தனி சிறையிலும், மற்ற நான்கு பேரும் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.