Skip to main content

ஆபாசப்படம் எடுத்து மிரட்டிய கைதிக்கு கரோனா; மகளிர் காவல்நிலையம் மூடல்!! 

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

SALEM DISTRICT ALL WOMEN POLICE STATION CLOSED CORONAVIRUS ISSUES


சேலத்தில், இளம்பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டியதாகக் கைது செய்யப்பட்ட அழகுநிலைய உரிமையாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட மகளிர் காவல்நிலையம் அதிரடியாக இழுத்து மூடப்பட்டது. காவல்துறையினரும், சிறைத்துறையினரும் கரோனா தொற்று இருக்குமோ எனப் பீதி அடைந்துள்ளனர்.
 


சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் 4- ஆவது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). இவருடைய மனைவி ரூபா. இவர்கள், வீட்டிலேயே அழகுநிலையம் நடத்தி வருகின்றனர். அழகுநிலையத்திற்கு வரும் ஏழைப் பெண்கள், கணவனை இழந்த மற்றும் பிரிந்து வாழும் பெண்களை மயக்கி அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளையும், அவர்களின் தனிப்பட்ட சில ஆபாசப்படங்களையும் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்தப் படத்தைக் காட்டி பெண்களை அடிக்கடி மிரட்டி லோகநாதன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதோடு, தனக்குத் தெரிந்த வாடிக்கையாளர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார். 
 

SALEM DISTRICT ALL WOMEN POLICE STATION CLOSED CORONAVIRUS ISSUES


இச்சம்பவத்தில் லோகநாதனின் நண்பர்களான தாதகாப்பட்டி வசந்த நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்கிற சிவா (36), பங்களா தோட்டம் பராசக்தி நகரைச் சேர்ந்த அஜய் என்கிற பிரதீப் (28) ஆகியோருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து நான்கு பெண்கள் அளித்த புகாரின்பேரில், லோகநாதன், சிவா, பிரதீப் ஆகிய மூவரையும் சேலம் நகர அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். லோகநாதனின் மனைவி ரூபா தலைமறைவாகி விட்டதை அடுத்து, அவரை தேடி வருகின்றனர்.
 


கரோனா தொற்று அபாயம் உள்ளதால், புதிதாகக் கைது செய்யப்படும் கைதிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி லோகநாதன் உள்ளிட்ட மூவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 29- ஆம் தேதி) காலையிலேயே கைதிகள் மூவரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, ஓமலூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து கரோனா பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், முக்கிய குற்றவாளியான லோகநாதனுக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போதும், கைது செய்வதிலும் உதவி கமிஷனர் ஈஸ்வரன், நகர காவல் ஆய்வாளர் குமார், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் உள்பட 30 பேர் முக்கியப் பங்காற்றினர். தற்போது கைதிகளுள் ஒருவருக்கு கரோனா உறுதியானதால் 30 பேருமே தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். காவல்நிலையத்தில் லோகநாதனிடம் நெருங்கி விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் பீதி அடைந்துள்ளனர். 
 

SALEM DISTRICT ALL WOMEN POLICE STATION CLOSED CORONAVIRUS ISSUES

 

http://onelink.to/nknapp


குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வீட்டுக்குச் சென்ற பெண் காவலர்கள் பலர், தங்களது பிள்ளைகளுடன் எப்போதும்போல் நெருக்கமாக இருந்துள்ளனர். தற்போது லோகநாதனுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் தங்களுக்கும், தங்கள் மூலமாக வீட்டில் இருப்பவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என கலக்கம் அடைந்துள்ளனர். இதையடுத்து சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையம், நகர காவல் நிலையங்களுக்கு கரோனா கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும், மகளிர் காவல்நிலையம் அதிரடியாக இழுத்து மூடப்பட்டது. 

அதேநேரம் லோகநாதன் ஓமலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டபோது அவரை தொட்ட சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள் என 81 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, நேற்று முன்தினம் (மே 28- ஆம் தேதி) இரும்பாலை காவல்நிலையத்தில் கைதான வாலிபர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு பணியாற்றி வந்த 15 காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். காவல்நிலையத்திற்கு வெளியே சாமியானா பந்தல் போடப்பட்டு, அங்குதான் தற்போது தற்காலிகமாக இரும்பாலை காவல்நிலையம் இயங்கி வருகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.