Skip to main content

போலி நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிப்பு; அரசுப் பள்ளி ஆசிரியரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி  

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

 Salem Attur Court dismisses government school teachers anticipatory bail pla

 

மனைவிக்கு ஜீவனாம்ச தொகையைத் தனது சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற போலி உத்தரவு நகல்களை சமர்ப்பித்த வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.    

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (45) அரசுப்பள்ளி ஆசிரியர். இவருடைய முதல் மனைவி கலா. கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், கலாவுக்கு ஆசிரியர் சரவணனின் ஊதியத்தில் இருந்து மாதம்தோறும் ஜீவனாம்சத்திற்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சரவணன், ஆத்தூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தின் பேரில்  ஒரு உத்தரவு நகலை, அவர் முன்பு பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி  மாவட்டம் சிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். அந்த உத்தரவு நகலில், சரவணனின் முதல் மனைவி கலாவுக்கு தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஜீவனாம்ச தொகையை அவர் கோரவில்லை. எனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

 

அதேபோல, தற்போது பணியாற்றி வரும் எலவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அதே நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற ஒரு உத்தரவு நகலை சமர்ப்பித்தார். அந்த உத்தரவில், முதல் மனைவி கலாவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஜீவனாம்சமாக மாதம் 9000  ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஜீவனாம்ச தொகை வேண்டாம் என்று கலா சொல்லிவிட்டார்.  எனவே, 2022 ஆம் ஆண்டு முதல் சரவணனுடைய சம்பளத்தில் ஜீவனாம்ச தொகை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த இரு உத்தரவு நகல்களின் மீதும் இரண்டு தலைமை ஆசிரியர்களுமே சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து உத்தரவின் உண்மைத்தன்மை குறித்து அறிய அவற்றை ஆத்தூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைத்து விவரம் கோரினர். இந்த உத்தரவு நகல்களை ஆய்வு செய்த நீதிமன்ற எழுத்தர் செல்வி, இப்படி ஒரு உத்தரவை ஆத்தூர் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்றும், இவை இரண்டுமே போலியானவை என்றும் கூறினார்.

 

மேலும் செல்வி, இது தொடர்பாக ஆசிரியர் சரவணன் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் கடந்த ஆண்டு சரவணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆசிரியர் சரவணன், முன்ஜாமீன் கோரி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தம்பிதுரை ஆட்சேபனை தெரிவித்தார். ஆசிரியரே மோசடியாக  நீதிமன்ற உத்தரவுகளை தயாரித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. அதனால் அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்  என்றார். அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி சுமதி, ஆசிரியர் சரவணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்ய ஆத்தூர் நகர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.